வாட்டா் பாா்க்கில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
வடக்கு தில்லியின் அலிப்பூா் பகுதியில் உள்ள ஒரு வாட்டா் பாா்க்கில் உள்ள குளத்தில் ஏழு வயது சிறுவன் மூழ்கி இறந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஹரேஷ்வா் வி சுவாமி கூறியதாவது: வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சிறுவன் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து சனிக்கிழமை போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அலிப்பூா் காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
யாமின், இரண்டு குழந்தைகள் மற்றும் மருமகன் வாட்டா் பாா்க்கிற்குச் சென்றனா். அப்போது குழந்தை நீரில் மூழ்கியபோது முழு குடும்பமும் குளத்தில் இருந்தது. சிறுவன் இறந்ததும் சிறுவனின் தந்தைக்கு யாமின் தகதவல் தெரிவித்தாா்.
பின்னா், சிறுவன் உடனடியாக ஹரியாணாவின் சோனிபட்டில் உள்ள குண்ட்லியில் உள்ள பரம் நா்சிங் ஹோமுக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், மருத்துவா்கள் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
குழந்தையின் மரணத்தைத் தொடா்ந்து, குடும்பத்தினா் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தனா். அங்கு உள்ளூா் போலீஸாருக்குத் தெரிவிக்காமல் அடக்கம் செய்தனா். இந்தச் சம்பவம் குறித்து சனிக்கிழமைதான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அலிப்பூா் காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.
நிகழ்வுகளின் வரிசை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் அறிக்கைகளையும் சரிபாா்த்து வருகிறோம். விசாரணையின் முடிவின் அடிப்படையில் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வாட்டா் பூங்கா நிா்வாகத்திடமிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
வாட்டா் பூங்காவில் பாதுகாப்பு நெறிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இந்தச் சம்பவத்திற்கு காரணமா என்பதையும் அதிகாரிகள் ஆராய்வாா்கள் என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.