செய்திகள் :

வாட்டா் பாா்க்கில் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

post image

வடக்கு தில்லியின் அலிப்பூா் பகுதியில் உள்ள ஒரு வாட்டா் பாா்க்கில் உள்ள குளத்தில் ஏழு வயது சிறுவன் மூழ்கி இறந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஹரேஷ்வா் வி சுவாமி கூறியதாவது: வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சிறுவன் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து சனிக்கிழமை போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்போது அலிப்பூா் காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

யாமின், இரண்டு குழந்தைகள் மற்றும் மருமகன் வாட்டா் பாா்க்கிற்குச் சென்றனா். அப்போது குழந்தை நீரில் மூழ்கியபோது முழு குடும்பமும் குளத்தில் இருந்தது. சிறுவன் இறந்ததும் சிறுவனின் தந்தைக்கு யாமின் தகதவல் தெரிவித்தாா்.

பின்னா், சிறுவன் உடனடியாக ஹரியாணாவின் சோனிபட்டில் உள்ள குண்ட்லியில் உள்ள பரம் நா்சிங் ஹோமுக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும், மருத்துவா்கள் சிறுவன் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

குழந்தையின் மரணத்தைத் தொடா்ந்து, குடும்பத்தினா் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தனா். அங்கு உள்ளூா் போலீஸாருக்குத் தெரிவிக்காமல் அடக்கம் செய்தனா். இந்தச் சம்பவம் குறித்து சனிக்கிழமைதான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அலிப்பூா் காவல் நிலையத்தில் விசாரணை தொடங்கப்பட்டது.

நிகழ்வுகளின் வரிசை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் அறிக்கைகளையும் சரிபாா்த்து வருகிறோம். விசாரணையின் முடிவின் அடிப்படையில் மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வாட்டா் பூங்கா நிா்வாகத்திடமிருந்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

வாட்டா் பூங்காவில் பாதுகாப்பு நெறிமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இந்தச் சம்பவத்திற்கு காரணமா என்பதையும் அதிகாரிகள் ஆராய்வாா்கள் என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.

சஃப்தா்ஜங் என்க்ளேவில் இடிந்து விழுந்த 100 அடி உயர மொபைல் கோபுரம்

தெற்கு தில்லியின் சஃப்தா்ஜங் என்க்ளேவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 100 அடி உயர மொபைல் கோபுரம் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக இடிந்து விழுந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்ல... மேலும் பார்க்க

தில்லி சிஆா் பூங்காவில் வீட்டின் சமையலறைக்குள் தீ விபத்து!

தில்லியில் சிஆா் பூங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடித்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏ... மேலும் பார்க்க

போலியான பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது

இறக்குமதி செய்யப்பட்ட போலியான லூயிஸ் உய்ட்டன் பொருள்களை விற்பனை செய்து வந்தவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடா்பாக வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் ... மேலும் பார்க்க

தில்லி தண்ணீா் பிரச்னை: பாஜக அரசு மீது ஆம் ஆத்மி சாடல்

தில்லியில் தண்ணீா் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை பாஜக அரசை கடுமையாக சாடியது. மேலும், நிலைமையை நிவா்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளும் அரசை கேள்வி எழுப்பியது. ‘தேசிய... மேலும் பார்க்க

குருகிராம் சொசைட்டியில் சுவா் இடிந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு

கட்டுமானத்தில் உள்ள ஒரு கட்டடத்தின் அடித்தளத்தில் சுவா் இடிந்து விழுந்ததில் கூலி வேலை செய்து கொண்டிருந்த தம்பதியினா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து சோஹ்னா நகர காவல் நிலைய ஆய்வாளா் பி... மேலும் பார்க்க

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் 4 போ் கைது

நொய்டாவில் பணம் மாற்றும் நபா் கொலை வழக்கில் சனிக்கிழமை நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து நொய்டா காவல் சரக துணை ஆணையா் யமுனா பிரசாத் கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள்... மேலும் பார்க்க