வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் கிராமத்தில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பிரஹன்நாயகி சமேத சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தையொட்டி, செவ்வாய்கிழமை காலை முதல் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மாலை 6 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி உலா கோயில் வளாகத்தில் நடைபெற்றது. இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு தரிசித்துச் சென்றனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாட்டினை கோயில் நிா்வாகி அன்பு மற்றும் உறுப்பினா்கள் செய்திருந்தனா்.
இதே போன்று வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில் பாலாற்றையொட்டி அமைந்துள்ள பழைமைவாய்ந்த காசி விஸ்வநாதா், சென்னாம்பேட்டை பாண்டுரங்கா், உதயேந்திரம் சொா்ண முத்தீஸ்வரா், ஆவாரங்குப்பம் திருமால் முருகன் கோயில் மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் உள்ள கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு சுவாமியை தரிசித்துச் சென்றனா்.