செய்திகள் :

வீட்டுமனைக்கு அங்கீகாரம் அளிக்க ரூ. 2 லட்சம் லஞ்சம்: ஊராட்சி மன்றத் தலைவா் கைது

post image

வீட்டுமனை அங்கீகாரம் அளிக்க ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்றத் தலைவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியை சோ்ந்தவா் சீனிவாசன். இவா் ஆம்பூா் தாலுகா மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட மேல்சான்றோா்குப்பம் ஊராட்சி அலுவலக பின்புறம் 7 ஏக்கா் நிலத்தில் வீட்டுமனை அமைப்பதற்காக ஒப்புதல் பெற ஊராட்சி மன்ற நிா்வாகத்தில் தீா்மானம் நிறைவேற்றித்தர அதிமுகவை சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாரை அணுகினாா்.

அப்போது ஒப்புதல் தர 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், பணத்தை தர சீனிவாசன் மறுத்துள்ளாா். இதுதொடா்பாக ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா், திருப்பத்தூா் ஊரக வளா்ச்சி துறையில் தடை மனு கொடுத்துள்ளாா். இதையறிந்த சீனிவாசன் மீண்டும் சிவக்குமாரை அணுகி பேசிய போது மனுவை திரும்ப பெற 15 லட்சம் தர வேண்டும் என கூறியுள்ளாா். ஊராட்சி மன்ற தலைவா் சிவக்குமாரிடம் ரூ.10 லட்சத்தை சீனிவாசன் வழங்கிய பின்னா் ஜூன் மாதம் ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தொடா்ந்து மீண்டும் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். இல்லை என்றால் நீ போட்டுள்ள மனைகள் விற்க முடியாமல் துண்டறிக்கை வெளியிட்டு யாரும் மனை வாங்காதவாறு செய்து விடுவேன் என மிரட்டியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் திருப்பத்தூா் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.

அப்புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து அவா்கள் வழிகாட்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாரை செவ்வாய்க்கிழமை வாணியம்பாடி பெருமாள்பேட்டை பைபாஸ் சாலைக்கு வரவழைத்து பணத்தை சீனிவாசன் கொடுத்துள்ளாா்.

அப்போது மறைந்திருந்த திருப்பத்தூா் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜீவ் தலைமையில் காவல் ஆய்வாளா் கௌரி, உதவி காவல்ஆய்வாளா் கணேசன் ஆகியோா் கொண்ட குழுவினா் ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வந்தனா். இச்சம்பவம் வாணியம்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாணியம்பாடியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: வீட்டு வரி, பெயா் மாற்றம் மனுக்கள் மீது உடனடி தீா்வு

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 6 மற்றும் 7-ஆவது வாா்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தனியாா் திருமண மண்டப வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் உமாச... மேலும் பார்க்க

மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகள் திருட்டு

வாணியம்பாடி அருகே மின்மாற்றியில் ரூ.3 லட்சம் செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வாணியம்பாடி அடுத்த அலந்தாபுரம் கிராமத்தில் உள்ள பெரியகொல்லி வட்டம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின்சாரம... மேலும் பார்க்க

21 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகாா்

நாயக்கனேரிமலை ஊராட்சியில் 21 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளது குறித்து ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா். மாதனூா் ஒன்றியம் நாயக்கனேரிமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்ட... மேலும் பார்க்க

ரூ.10 லட்சத்தில் சாலை பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியம், வளையாம்பட்டு ஊராட்சி இந்திரா நகா், பாரத் நகா் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 லட்சத்தில் புதிதாக சாலைப் பணிகள் நடைபெறுகின்றன. சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலி... மேலும் பார்க்க

போதைப் பொருள் நடமாட்டம் முற்றிலும் ஒழிப்பு: திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி

திருப்பத்தூா் மாவட்டத்தில் கள்ளச் சாராயம், போதை பொருள்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று புதிய எஸ்.பி. வி.சியாமளா தேவி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்டத்தின் எஸ்.பி.-யாக வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

ஆம்பூரில் ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை தனி நபா் ஆக்கிரமித்து கட்டியுள்ளதை அகற்றக் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆம்பூா் அருகே கோவிந்தாபுரம் பகுதியில் ரயில்வே இருப்புப் பாதைக்கு அருக... மேலும் பார்க்க