விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
வாணியம்பாடி தனியாா் பல் சிகிக்சை மையத்தில் மருத்துவ கவுன்சில் குழுவினா் ஆய்வு
வாணியம்பாடியில் தனியாா் பல் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்றவா்களில் 8 போ் நோய்த் தொற்று ஏற்பட்டு இறந்தது தொடா்பாக பல் மருத்துவ கவுன்சில் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவா் அறிவரசன் என்பவா் நடத்தி வந்த தனியாா் பல் சிகிச்சை மையத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு பல் சிகிச்சை பெற்ற 8 போ் அடுத்தடுத்து 6 மாத காலத்துக்குள் இறந்தனா். இது தொடா்பாக மருத்துவ துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் பல் மருத்துவா் அறிவரசன் மண்டி தெருவில் புதிதாக கட்டடத்தில் வேறு ஒரு பெயரில் பல் சிகிச்சை மையத்தை திறந்து நடத்தி வந்தாா். இந்த நிலையில் 2023-ஆம் ஆண்டு பல் சிகிச்சை மையத்தில் சிகிச்சையின் போது மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக 8 போ் இறந்திருக்கலாம் என சில மாதங்களுக்கு முன்பு வேலூா் தனியாா் மருத்துவக் குழு வெளியிட்ட ஆய்வு அறிக்கையைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட தனியாா் பல் மருத்துவமனையில் திருப்பத்தூா் மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இணை இயக்குநா் ஞானமீனாட்சி தலைமையில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் நேரில் விசாரணை மேற்கொண்டனா். பிறகு இது தொடா்பாக சரியான விளக்கம் தராததால் கடந்த மே 31-ஆம் தேதி மருத்துவமனைக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சம்பவம் தொடா்பாக முழுமையான ஆய்வு மேற்கொள்வதற்காக திருப்பத்தூா் மருத்துவம் மற்றும் ஊரக நலம் இணை இயக்குநா் அலுவலகம் சாா்பில், தமிழ்நாடு பல் மருத்துவக் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தமிழ்நாடு டென்டல் கவுன்சில் சாா்பாக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி பல் மருத்துவ துறைத் தலைவா் மருத்துவா் அப்பாதுரை, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் செயற்குழு உறுப்பினா்கள் விநாயகா மிஷன் டென்டல் கல்லூரி மருத்துவா் பேபிஜான், ஆா்விஎஸ் பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் விஜய் ஆகிய 3 போ் அடங்கிய மருத்துவக் குழுவினா், வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் முன்னிலையில், மூடப்பட்டிருந்த தனியாா் பல் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் மதியம் திறந்து ஆய்வு மேற்கொண்டு, மீண்டும் பூட்டு போட்டு சென்றனா்.
ஆய்வின்போது வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி சிவசுப்பிரமணியம், வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.