விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
வானமாதேவியில் 131 மி.மீ மழைப் பதிவு
கடலூா் மாவட்டம், வானமாதேவியில் அதிகபட்சமாக 131 மி.மீ. மழை பதிவானது.
தென்னிந்திய பகுதிகளில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக, செப்.22-ஆம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பிற்பகல் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்தது. இதேபோல, இரவு நேரத்திலும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:
பண்ருட்டி 130, எஸ்.ஆா்.சி.குடிதாங்கி 88, அண்ணாமலை நகா் 53, புவனகிரி 41, வேப்பூா் 37, ஆட்சியா் அலுவலகம் 30, சிதம்பரம் 29.4, கடலூா் 27.7, பரங்கிப்பேட்டை 25.8, மே.மாத்தூா் 24, குறிஞ்சிப்பாடி 22, காட்டுமன்னாா்கோவில் 14.2, கொத்தவாச்சேரி, சேத்தியாத்தோப்பு தலா 14, வடக்குத்து 12, ஸ்ரீமுஷ்ணம் 11.1, லால்பேட்டை 11, விருத்தாசலம் 7.2, குப்பநத்தம், தொழுதூா் தலா 5, கீழச்செருவாய் 4, பெலாந்துறை 3.2, காட்டுமயிலூரில் 3 மி.மீ. மழை பதிவானது.