வேலூர்: ஒரே நாளில் பிடிபட்ட 8 போலி மருத்துவர்கள் - காவல்துறை கடும் எச்சரிக்கை!
வாய்மையே வெல்லும்! ஜெய் ஹிந்த்!:செபி அறிவிப்புக்குப் பின் அதானி பதிவு
புது தில்லி: முழுமையான விசாரணைக்குப் பிறகு, ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நாங்கள் எப்போதும் கூறி வந்ததை செபி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அதானி குழும தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என செபி அறிவித்ததைத் தொடர்ந்து கௌதம் அதானி இவ்வாறு கூறியிருக்கிறார்.
பங்குகளின் விலையை முறைகேடாக உயா்த்தியதாக அதானி குழுமம் மற்றும் அதன் தலைவா் கௌதம் அதானி மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது என்று இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அறிவித்ததைத் தொடர்ந்து, கௌதம் அதானி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.