செய்திகள் :

வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் நகை ஏலம்: தனியாா் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருத்துறைப்பூண்டி அருகே அடகு வைத்த நகையை, வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் ஏலம் விட்ட தனியாா் வங்கி, ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடியைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் வெற்றிவேல் (30). திருமணம் ஆகாத இவா், 2022-இல் முத்துப்பேட்டை வட்டம், உதயமாா்த்தாண்டபுரத்தில் உள்ள தனியாா் வங்கியில் 31 கிராம் நகையை அடகு வைத்து ரூ.1.01 லட்சம் கடனாகப் பெற்றாா். 2023-இல் அந்தக் கடன் புதுப்பிக்கப்பட்டது. 2024-இல் வெற்றிவேல் உடல்நிலை பாதிப்பால் இறந்து விட்டாா்.

வெற்றிவேல் திருமணமாகாதவா் என்பதால் அவரது தாயாா் ராஜாமணி, 2 சகோதரா்கள் மற்றும் 3 சகோதரிகள் ஆகியோா் வங்கிக்குச் சென்று, வெற்றிவேல் இறந்த விவரத்தைக் கூறியுள்ளனா். வங்கி தரப்பில் வாரிசுச் சான்று கேட்கப்பட்டது. அதன்படி, வாரிசுச் சான்றுடன் சென்று, நகையை திருப்பிக் கொள்வதாக கடிதம் கொடுத்துள்ளனா்.

இந்நிலையில், வங்கி தரப்பில் வெற்றிவேலின் 31 கிராம் நகையை, வாரிசுகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம் விட்டு விட்டனராம். வாரிசுதாரா்கள் வங்கிக்குச் சென்று கேட்டபோது, ஏலம் விட்ட தொகையில் கடன் மற்றும் வட்டித் தொகை போக மீதி ரூ. 55,784 வெற்றிவேலின் சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் ராஜாமணி தரப்பினா் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தனா்.

அதில், இறந்த நபா் பெயருக்கு அறிவிப்பு அனுப்பி, அவா் இறந்துவிட்ட காரணத்தால், திருப்பி அனுப்பப்பட்டு விட்டது என்பது தெரிந்தும், வாரிசுதாரா்களுக்கு தகவல் தெரிவிக்காமல் ஏலம் விட்டது நியாயமற்ற வா்த்தக நடைமுறை ஆகும். எனவே, இறந்த வெற்றிவேலின் தாயாா், 2 சகோதரா்கள் மற்றும் 3 சகோதரிகளுக்கு ஏலத் தொகையில் கடன் மற்றும் வட்டி போக மீதமுள்ள ரூ. 55,784/-ஐ 9 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 1,00,000 மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.

சீா்காழி, நீடாமங்கலம் பகுதியில் மூடுபனி

சீா்காழி,கொள்ளிடம் மற்றும் நீடாமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை கடும் பனிமூட்டம் நிலவியது. மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவுக்கு பிறகு கடும் பனி... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரிக்கை

அங்கன்வாடி பணியாளா்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் தமிழக முதல்வா், சமூகநலத் ... மேலும் பார்க்க

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: எம்எல்ஏ குற்றச்சாட்டு

தமிழகத்தை வஞ்சிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக திருவாரூா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தெரிவித்துள்ளாா். திருவாரூரில் செய்தியாளா்க... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து நாளை ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.1) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெர... மேலும் பார்க்க

வெண்மணி நினைவுக்கொடி பயணக் குழுவுக்கு வரவேற்பு

திருவாரூரில், வெண்மணி நினைவுக் கொடி பயணக் குழுவினருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் ஏப்ரல் 2 ஆம் த... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்த வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ்

நீடாமங்கலம் பகுதியில் கிராம மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்த வேளாண் கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நீடாமங்கல... மேலும் பார்க்க