செய்திகள் :

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு

post image

வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

வால்பாறையில் எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் உள்ளது.

வனத்தில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் சிறுத்தைகள் சாலைகள், நகா்ப் பகுதிகளில் சுற்றிவருகின்றன. குறிப்பாக வாழைத்தோட்டம் குயிருப்புப் பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் சிறுத்தைகள் உலவி வருகின்றன.

இதனால், மக்கள் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு தனியே செல்ல வேண்டாம் எனவும், வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம் எனவும், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை புகைப்படம் எடுக்க முயற்சிக்கக் கூடாது என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க