Manisha Koirala: "பாபா படத்தின் தோல்விக்குப் பிறகு எனக்கு வாய்ப்புகள் வரவில்லை!"...
வால்பாறை அருகே சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு!
வால்பாறை அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தாய் கண் முன்னே, சிறுத்தை வெள்ளிக்கிழமை மாலை கவ்விச் சென்ற நிலையில், சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
6 வயது சிறுமியை தாய் கண்முன்னே சிறுத்தை கவ்விச்சென்ற நிலையில், நேற்று மாலை முதல் ட்ரோன் உதவியுடன் தீவிர தேடுதல் பணியில் காவல் துறையினரும் வனத்துறையினரும் ஈடுபட்டு வந்தனர். மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று காலை, சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த பச்சமலை எஸ்டேட் குடியிருப்பில் தங்கி வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், இங்கு பணியாற்றும் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த மனோஜ் என்பவரது மகள் ரோஷினி (6) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தாா்.
அப்போது, தேயிலைத் தோட்டத்தில் செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த சிறுத்தை, ரோஷினியைத் தாக்கி கவ்விச் சென்றது.
இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் கூச்சலிட்டதுடன், சிறுத்தையைப் பின் தொடா்ந்து சென்றனா். ஆனால், பாதி வழியிலேயே சிறுமியுடன் சிறுத்தை மாயமானது. இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினருடன் அப்பகுதி மக்கள் இணைந்து ரோஷினியைத் தேடினர்.
இரவு முழுக்க தேடும் பணி நடைபெற்றும் சிறுமி கிடைக்காத நிலையில், சனிக்கிழமை காலை, சிறுமியின் சடலம் கிடைத்துள்ளது.