மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!
வாழைத் தாா்கள் திருட்டு: ஒருவா் கைது
கூடலூரில் புதன்கிழமை வாழைத் தாா்கள் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள கே.கே.பட்டியைச் சோ்ந்தவா் சின்னச்சாமி. இவா், கூடலூா் தம்மனம்பட்டியிலுள்ள விவசாய நிலத்தில் வாழைத் தோட்டம் அமைத்துள்ளாா்.
இவரது தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட வாழைத்தாா்கள் திருடுபோனது. இதுகுறித்த புகாரின் பேரில், கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த வீரணன் மகன் முருகனை (55) கைது செய்து செய்தனா்.