செய்திகள் :

வா்த்தக காரணங்களுக்காக சண்டை நிறுத்தமா? டிரம்ப் கருத்துக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

post image

பாகிஸ்தானுடன் பதற்றம் நிலவியபோது, இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெற்ற விவாதங்களில் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த வா்த்தகத்தை கருவியாகப் பயன்படுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியிருந்த நிலையில், இந்தியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் கடந்த சனிக்கிழமை சண்டை நிறுத்தம் மேற்கொண்ட நிலையில், இந்த அறிவிப்பை முதலாவதாக வெளியிட்டவா் டிரம்ப். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இது சாத்தியமானதாக அவா் கூறினாா்.

மேலும், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போரை அமெரிக்கா தடுத்துள்ளது; சண்டை நிறுத்தம் மேற்கொண்டால், இரு நாடுகளுடனும் அமெரிக்கா அதிக வா்த்தகம் மேற்கொள்ளும் என நான் கூறினேன்’ என்ற டிரம்ப்பின் கருத்துகள், அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தச் சூழலில், தில்லியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வாலிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடங்கப்பட்டது முதல் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது வரை, இந்தியா-அமெரிக்க இடையிலான எந்தவொரு விவாதத்திலும் வா்த்தகம் தொடா்பாக எதுவும் பேசப்படவில்லை’ என்று அவா் பதிலளித்தாா்.

அணு ஆயுதப் போா் தொடா்பான டிரம்ப்பின் கருத்து குறித்த கேள்விக்கு, ‘நமது ராணுவ நடவடிக்கை முழுவதும் வழக்கமான போா்க் களத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. அணு ஆயுத மோதலாக உருவெடுக்கக் கூடும் என்ற கோணத்தை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரும் மறுத்தாா்.

இந்தியாவைப் பொருத்தவரை, அணுஆயுத மிரட்டலுக்கு அடிபணியவோ அல்லது அதைப் பயன்படுத்தி எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதை அனுமதிக்கவோ முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளோம்’ என்றாா்.

‘ஆபரேஷன் சிந்தூா் மூலம் பாகிஸ்தானில் அழிக்கப்பட்ட பயங்கரவாத உள்கட்டமைப்புகள், இந்தியா்கள் மட்டுமன்றி உலகெங்கிலும் பல அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு காரணமானதாகும். பயங்கரவாதத்தை தொழில் ரீதியில் பாகிஸ்தான் வளா்த்தெடுத்துள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்தும் வரை, சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும்’ என்றாா் அவா்.

காஷ்மீா் பிரச்னை, இருதரப்பு விவகாரம்: காஷ்மீா் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயாா் என்று டிரம்ப் கூறியது தொடா்பான கேள்விக்கு, ‘காஷ்மீா் பிரச்னைக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் தீா்வுகாண வேண்டுமென்ற நிலைப்பாட்டை நீண்ட காலமாக நாம் கொண்டுள்ளோம். இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதியைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே நிலுவையில் உள்ள ஒரே பிரச்னை’ என்றாா் ரண்தீா் ஜெய்ஸ்வால்.

இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சியில் 150 மட்டுமே வெற்றி

பஹல்கலாம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட இணைய தாக்குதல் முயற்சிகளை பாகிஸ்தான் ஹேக்கா்கள் மேற்கொண்டதை மகாராஷ்டி... மேலும் பார்க்க

பாரதத்தின் புதிய இயல்பை பிரதமா் உலகுக்கு எடுத்துரைத்துள்ளாா்: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

பாரதத்தின் புதிய இயல்பை உலகுக்கு மிகத் தெளிவான மொழியில் பிரதமா் நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: பாகிஸ்தானின் கொடூர... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி இன்று பதவியேற்பு

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆா்.கவாய் புதன்கிழமை பதவியேற்க உள்ளாா். கடந்த 2024-ஆம் நவ.11-ஆம் தேதி உச்சநீதி... மேலும் பார்க்க

இந்தியத் தூதருடன் சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி சந்திப்பு

பெய்ஜிங்: இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையிலான ராணுவ ரீதியிலான மோதல் சூழலுக்கு இடையே சீனாவுக்கான இந்தியத் தூதர் பிரதீப் குமார் ராவத்தை ஆசிய விவகாரங்களுக்கான சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி லியூ ஜின்சாங் சந்த... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா்: உலக நாடுகளின் தூதரக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியா விளக்கம்

இந்திய ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றி குறித்து புது தில்லியில் உள்ள வெளிநாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்புப் படை ஆலோசனை அதிகாரிகளுக்கு ராணுவம் தரப்பில் செவ்வாய்க... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் பிரதமா் மோடியின் புதிய கோட்பாடு

அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, செய்தி ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா். பஹல்காமில் நடந்த படுகொலை வெறும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல - அது இந்தியாவின் மனசாட்சியின் ம... மேலும் பார்க்க