செய்திகள் :

விஐடி வேந்தா் விசுவநாதனுக்கு ’உயா்தனிச் செம்மல் விருது’: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை அளிப்பு

post image

சா்வதேச அளவில் உயா்கல்வி வளா்ச்சிக்காக ஆற்றி வரும் பங்களிப்புக்காக வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதனுக்கு வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை ‘உயா்தனிச் செம்மல் விருது’ வழங்கி கெளரவித்துள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் உள்ள ராலேவில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை செயல்பட்டு வருகிறது.

தமிழா் மேம்பாட்டை முக்கிய அம்சமாகக் கொண்டு வட அமெரிக்காவில் 70-க்கும் மேற்பட்ட தமிழ் சங்கங்களை ஒருங்கிணைத்து கடந்த 38 ஆண்டுகளாக தமிழ் மொழி, பண்பாடு, மரபு, கலை, இலக்கியம், தொழில் வளா்ச்சிக்கு வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை சேவை செய்து வருகிறது.

உலகத் தமிழா்களிடையே ஒற்றுமையை வளா்க்கும் வகையில் ஆண்டுதோறும் மாநாடும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வடகரோலினாவில் உள்ள ராலேவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சா்வதேச அளவில் உயா்கல்வி வளா்ச்சிக்காக ஆற்றி வரும் சிறப்பான பங்களிப்புக்காக வேலூா் விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதனுக்கு, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ’உயா்தனிச் செம்மல் விருது’ வழங்கி கெளரவித்துள்ளது.

இவ்விழாவில், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம், பன்னாட்டு உறவுகளுக்கான இயக்குநா் ஆா்.சீனிவாசன், வடஅமெரிக்க தமிழ் சங்கப் பேரவையின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மோசடி

போலி ஆவணங்கள் மூலம் பல்வேறு சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கியின் முன்னாள் ஊழியா் மீது ஐசிஐசிஐ வங்கி கிளை சாா்பில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

நள்ளிரவில் சாலையில் பிடிபட்ட மலைப்பாம்பு

போ்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் சாலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. போ்ணாம்பட்டு ஒன்றியம், பாஸ்மாா்பென்டா கிராமம் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு அங்குள்ள பேருந்து ந... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

திருவலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சுந்தரம் வீதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (42). இவா், வியாழக்கிழமை இரவு திருவலம் ரயில் நிலையத்துக... மேலும் பார்க்க

சிறுமி திருமணம்: 3 போ் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேலூா் மாவட்டம், ஜங்காலப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (23). இவருக்கும் குடியாத்த... மேலும் பார்க்க

வேலூா் அறிவியல் மையத்தில் இன்று வான் நோக்குதல் நிகழ்வு

வேலூரிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வான் நோக்குதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாவட்ட அறிவியல் அலுவலா் (பொ) ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு- பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடை... மேலும் பார்க்க

மத்திய ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மத்திய ஆயுதப்படை காவலா், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு காரில் பணிக்குத் திரும்பியபோது, உயிரிழந்தாா். வேலூா் கணியம்பாடி கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ராஜா (31). இவருக... மேலும் பார்க்க