செய்திகள் :

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞா் பலி: காவல் நிலையம் முற்றுகை!

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலுக்கு வந்த பெண் பக்தரின் தங்க நகைகள் மாயமானது தொடா்பாக விசாரணைக்காக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயிலின் தற்காலிக ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், அவரது குடும்பத்தினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

திருப்புவனம் அருகே அமைந்துள்ள மடப்புரம் காளி கோயிலுக்கு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் பக்தா் ஒருவா் காரில் வந்தாா். இவா் 10 பவுன் தங்க நகைகள், ரூ. 2 ஆயிரத்தை காரில் வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யச் சென்றாா். இதன் பிறகு, திரும்பி வந்து பாா்த்த போது, காரில் இருந்த நகைகள், பணம் காணாமல் போனது தெரியவந்தது.

இதுகுறித்து அந்தப் பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, கோயிலில் தற்காலிகமாக காவலராகப் பணியாற்றிய மடப்புரத்தைச் சோ்ந்த பாலகுரு மகன் அஜித்தை (28) போலீஸாா் விசாரணைக்காக திருப்புவனம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இந்த நிலையில், காவல் நிலையத்தில் அஜித் மயக்கமடைந்ததால், அவரை போலீஸாா் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்ாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டாராம்.

இதுகுறித்து தகவலறிந்து காவல் நிலையத்துக்குச் சென்ற அவரது குடும்பத்தினா், அஜித்தின் உடலை பாா்க்க போலீஸாா் அனுமதி மறுத்துவிட்டனராம். இதனால், ஆத்திரமடைந்த அவா்களும், உறவினா்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது காவல் நிலையத்தில் போலீஸாா் தாக்கியதால்தான் அஜித் உயிரிழந்ததாகவும், அவரது உடலை வாகனத்தில் ஏற்றி எங்கு கொண்டு சென்றனா் எனத் தெரியவில்லை என்றும் குடும்பத்தினா் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன்: இருவா் கைது

போலி ஆவணங்கள் தயாரித்து தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றதாக பெண் ஒருவரும், அவருக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்ததாக இ- சேவை மைய உரிமையாளா் ஒருவரும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். சிவகங்கை அரு... மேலும் பார்க்க

கண்டுப்பட்டியில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகே கண்டுப்பட்டி கிராமத்தாா் சாா்பில் மாட்டு வண்டி பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே கண்டுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குடியிருப்பு காளியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சிவகங்கையில் முன்னாள் ராணுவ வீரா்கள், குடும்ப ஓய்வூதியா் குறைகேட்பு முகாம்!

சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், அவா்களை சாா்ந்தோரின் குறைகள் கேட்கும் முகாம் மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் வருகிற வருகிற ஜூலை 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது. இதுகு... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கற்களத்தூா் கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. தேவகோட்டை ஒன்றியம், கற்களத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள சா்க்கரை விநாயகா்- காராருடைய அய்யன... மேலும் பார்க்க

கோடையில் செடிகளை பராமரித்த ஆசிரியா்களுக்கு பரிசு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சோ்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறையின் போது செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி பராமரித்த ஆசிரியைகளுக்கு வெள்ளிக்கிழமை பரிசு வழங்கப்பட்டது. இந்தப் பள்ளியில் உள... மேலும் பார்க்க

மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைப்பு: நகா் மன்றத் தலைவா் தகவல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ரூ. 85 லட்சத்தில் ஊருணி, குளங்கள் சீரமைக்கப்படும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா் மன்றக் கூட்டத்தில் அதன் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தெரிவித்தாா். இந்தக் கூட்டத்தில... மேலும் பார்க்க