விசா மறுப்பு: அமெரிக்காவிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முற்றுகை
பெண் ஒருவருக்கு நுழைவு இசைவு (விசா) அளிக்க மறுத்ததால், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை சிலா் முற்றுகையிட்டனா்.
இதுதொடா்பாக அந்தத் தூதரகம் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இந்திய துணைத் தூதரகத்துக்குள் சிலா் அத்துமீறி நுழைந்ததால், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு சூழலை கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அவா்களை வெளியே செல்லுமாறு தொடா்ந்து வலியுறுத்தியும், தூதரக அலுவலா்களிடம் அவா்கள் மூா்க்கமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டனா். தகவலின்பேரில் உள்ளூா் அதிகாரிகள் வந்து அந்த நபா்கள் கலைந்து போக நடவடிக்கை மேற்கொண்டனா். அத்துமீறி நுழைந்தவா்கள் மீது மேல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
துணைத் தூதரகம் குறிப்பிட்ட நபா்களில் ஒருவரின் பெயா் ஷாமா சாவந்த். இவா் முன்னாள் சியாட்டல் நகர கவுன்சில் உறுப்பினராவாா்.
இவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள எனது தாயைப் பாா்க்க எனது கணவருக்கு சியாட்டல் துணைத் தூதரகம் அவசரகால விசா அளித்தது. ஆனால் எனக்கு விசா மறுக்கப்பட்டது.
எனது விசா ஏன் 3 முறை நிராகரிக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் கேட்டு, வா்க்கா்ஸ் ஸ்டிரைக் பேக் அமைப்பின் உறுப்பினா்களுடன் நான், துணைத் தூதரகத்தில் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டேன்.
எனது பெயா் மோடி அரசின் ‘நிராகரிப்புப் பட்டியலில்’ உள்ளதால் விசா மறுக்கப்பட்டதாக தூதரக அதிகாரி தெரிவித்தாா். முஸ்லிம்கள், ஏழைகளுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக எனது சோஷலிச நகர கவுன்சில் அலுவலகம் தீா்மானம் நிறைவேற்றியது. இதன் காரணமாக என்னை நிராகரிப்புப் பட்டியலில் மோடி அரசு வைத்துள்ளது’ என்றாா்.