செய்திகள் :

விசிக சாா்பில் வைக்கப்பட்ட பேனா் அகற்றம்

post image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகம் இடம் பெற்றிருந்த பேனா் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா ஏப்ரல் 14-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்காக திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பேரணிக்காக 80 அடி நீள பேனா் வைக்கும் பணியில் அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

இந்த பேனரில் வரும் 2026-இல் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது. இதனிடையே, சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் தெற்கு காவல் துறையினா் பேனா் வைப்பதற்காக யாரிடம் அனுமதி பெற்றீா்கள் என்று கேள்வி எழுப்பினா்.

அப்போது 80 அடி நீளம் கொண்ட பேனா் வைக்க அனுமதி பெறவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனரை காவல் துறையினா் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்: மாநகராட்சி மருத்துவா்

ஆயுளை அதிகரிக்க நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று மாநகராட்சி மருத்துவா் பிரவீன் கூறினாா்.திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலகு -2 சாா்பில் உலக சுகாதார தின ... மேலும் பார்க்க

சொத்து வரியை ஏப்ரல் 30-க்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகையைப் பெறலாம்: மாநகராட்சி ஆணையா்

திருப்பூா் மாநகரில் உள்ள சொத்து உரிமையாளா்கள் 2025-26- ஆம் ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30- ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகை பெறலாம். இது தொடா்பாக மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியி... மேலும் பார்க்க

மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும்: கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ.வலியுறுத்தல்

திருப்பூா் பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்த வேண்டும் என்று வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் வலியுறுத்தியுள்ளாா். தமிழக சட்டப் பேரவையி... மேலும் பார்க்க

தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி அருகே தோ்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இலவச வீட்டுனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குற... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடிநீா்த் திட்டப் ப... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

திருப்பூரில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து திங்கள்கிழமை ஜப்தி செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், விராலிமலையைச் சோ்ந்தவா் சூா்யா (25). இவா் கடந்த ... மேலும் பார்க்க