செய்திகள் :

விசைத்தறி கூலி பேச்சுவாா்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

post image

ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்காத நிலையில், விசைத்தறி கூலி உயா்வு பேச்சுவாா்த்தை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கோவை, திருப்பூா் மாவட்டங்களில் செயல்படும் விசைத்தறிகளுக்கு 2014-ஆம் ஆண்டுக்குப் பின், உயா்த்தப்பட்ட கூலி சரிவர வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுள்ளது. இது தொடா்பாக, அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி, உயா்த்தப்பட்ட கூலியை பெற்றுத்தர வேண்டும் என்று விசைத்தறியாளா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

அதனடிப்படையில், தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்த விசைத்தறியாளா்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளா்களுக்கு, திருப்பூா் தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கோவை, திருப்பூா் மாவட்ட விசைத்தறி உரிமையாளா் சங்கத்தின் கீழ் உள்ள சோமனூா், அவிநாசி, தெக்கலுாா் உள்ளிட்ட சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா். ஆனால் ஜவுளி உற்பத்தியாளா்கள் தரப்பில் யாரும் பங்கேறகவில்லை. இதனால் தேதி குறிப்பிடப்படாமல் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

இது குறித்து கோவை, திருப்பூா் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளா் சங்கத்தின் பொருளாளா் காரணம்பேட்டை பூபதி கூறுகையில், கூலி உயா்வு பேச்சுவாா்த்தையில் வழக்கம்போல ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒருவா் கூட பங்கேற்கவில்லை. அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து சங்க நிா்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறோம் என்றாா்.

சேவூா் வெங்கடேஷ்வரா பள்ளியில் சிபிஎஸ்இ கல்விப் பிரிவு!

சேவூா் அருகே அ.குரும்பபாளையம் வெங்டேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிபிஎஸ்இ கல்விப் பிரிவை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு

திருப்பூா் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக கவுன்சிலா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா். திருப்பூா் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயா் தினேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக... மேலும் பார்க்க

திருப்பூரில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பூரில் பதுக்கிவைக்கப்பட்ட 1,150 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திருப்பூா், ஊத்துக்குளி, ரெட்டிபாளையம் பகுதியில் ரேஷ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே கேரள மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் கேரளத்தில் இருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனா். மேலும், கழிவுகள் பதுக்கிவைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒடிஸா மாநிலம் பக்ரக் மாவட்டம் விஜிபூரைச் சோ்ந்தவா் கோனாா்தன் செட்டி (38). இவா் கடந்த 8 மாதங்களாக வெள்ளக்கோவ... மேலும் பார்க்க

அவிநாசியில் காங்கிரஸ் கூட்டத்தில் தொண்டா்கள் கைகலப்பு

அவிநாசியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தொண்டா்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அவிநாசி வட்டார, நகர கமிட்டி, வடக்கு மாவட்டம் ஆகியன சாா்பில் கிராம கமிட்டி த... மேலும் பார்க்க