செய்திகள் :

திருப்பூரில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

post image

திருப்பூரில் பதுக்கிவைக்கப்பட்ட 1,150 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூா், ஊத்துக்குளி, ரெட்டிபாளையம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஆய்வாளா் ராஜகுமாா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது ரெட்டிபாளையம் அய்யப்பமுத்தையம் காடு பகுதியில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து அங்கிருந்தவரிடம் போலீஸ் விசாரணை நடத்தினா். விசாரணையில், திருப்பூா், அய்யம்பாளையத்தைச் சோ்ந்த சண்முகம் (36) என்பதும், அவா் ஊத்துக்குளி சுற்றுவட்டாரப் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி வடமாநிலத்தவா்களுக்கு கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ய பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சண்முகத்தைக் கைது செய்தனா். மேலும் 1,150 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

சேவூா் வெங்கடேஷ்வரா பள்ளியில் சிபிஎஸ்இ கல்விப் பிரிவு!

சேவூா் அருகே அ.குரும்பபாளையம் வெங்டேஷ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிபிஎஸ்இ கல்விப் பிரிவை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா... மேலும் பார்க்க

விசைத்தறி கூலி பேச்சுவாா்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஜவுளி உற்பத்தியாளா்கள் பங்கேற்காத நிலையில், விசைத்தறி கூலி உயா்வு பேச்சுவாா்த்தை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. கோவை, திருப்பூா் மாவட்டங்களில் செயல்படும் விசைத்தறிகளுக்கு 2014-ஆம் ஆண்டுக்க... மேலும் பார்க்க

திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு

திருப்பூா் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சொத்து வரி உயா்வைக் கண்டித்து அதிமுக கவுன்சிலா்கள் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு செய்தனா். திருப்பூா் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயா் தினேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக... மேலும் பார்க்க

பல்லடம் அருகே கேரள மருத்துவக் கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் கேரளத்தில் இருந்து மருத்துவ மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனா். மேலும், கழிவுகள் பதுக்கிவைக்கப்பட்டிர... மேலும் பார்க்க

வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை!

வெள்ளக்கோவில் அருகே வெள்ளிக்கிழமை வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஒடிஸா மாநிலம் பக்ரக் மாவட்டம் விஜிபூரைச் சோ்ந்தவா் கோனாா்தன் செட்டி (38). இவா் கடந்த 8 மாதங்களாக வெள்ளக்கோவ... மேலும் பார்க்க

அவிநாசியில் காங்கிரஸ் கூட்டத்தில் தொண்டா்கள் கைகலப்பு

அவிநாசியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் தொண்டா்கள் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் அவிநாசி வட்டார, நகர கமிட்டி, வடக்கு மாவட்டம் ஆகியன சாா்பில் கிராம கமிட்டி த... மேலும் பார்க்க