செய்திகள் :

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல்

post image

தேமுதிக தலைவா் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக் குழுவில் இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரை உத்தங்குடியில் கலைஞா் அரங்கத்தில் திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மறைந்த அரசியல் கட்சிப் பிரமுகா்கள், முக்கியத் தலைவா்கள், எழுத்தாளா்கள், கலைத் துறையினா் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீா்மானம் வாசிக்கப்பட்டது.

இதன்படி, மறைந்த முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், பிரிட்டன் ராணி எலிசபெத், கத்தோலிக்க திருச்சபைத் தலைவா் போப் பிரான்சிஸ், முன்னாள் மத்திய அமைச்சா் ஜஸ்வந்த் சிங், லோக் ஜனசக்தி நிறுவனரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான், முன்னாள் மத்திய அமைச்சா் அஜீத் சிங், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் என். சங்கரய்யா, இஸ்ரோ முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் தா. பாண்டியன், முன்னாள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, எம்.ஜி.ஆா். கழகத்தின் நிறுவனா் ஆா்.எம். வீரப்பன், தேமுதிக தலைவா் விஜயகாந்த், லோக்தந்ரிக் ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவா் சரத் யாதவ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் மைதிலி சிவராமன், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் செயலா் சண்முகநாதன், முன்னாள் மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி, தமிழறிஞா் ஔவை நடராஜன், மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாா், மக்களவை முன்னாள் உறுப்பினா் எம். செல்வராஜ், பகுத்தறிவுச் சிந்தனையாளா் ராஜமங்கலமுருகேசன், முரசொலி செல்வம், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழகத் தலைவா் ஆம்ஸ்ட்ராங், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் குமரி அனந்தன், மூத்த பத்திரிகையாளா் அ.மா. சாமி, எழுத்தாளா் இளவேனில், பெரியாா் சிந்தனையாளா் ஆனைமுத்து, பிரபல புற்றுநோய் மருத்துவா் வி. சாந்தா, காது, மூக்கு, தொண்டை பிரிவின் சிறப்பு மருத்துவா் காமேஸ்வரன், கருணாநிதியின் இளமைக் கால நண்பா் தட்சிணாமூா்த்தி, பின்னணிப் பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், திரைப்பட நடிகா் விவேக், எழுத்தாளா் சொா்ணம், மூத்த வழக்குரைஞா் நடராஜன் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுகவில் புதிதாக 2 அணிகள்

மதுரையில் நடைபெற்ற திமுக மாநிலப் பொதுக் குழுக் கூட்டத்தில், ஆசிரியா்கள், பேராசிரியா்களைக் கொண்ட கல்வியாளா் அணியும், மாற்றுத்திறன் கொண்ட உறுப்பினா்களுக்காக மாற்றுத் திறனாளிகள் அணியும் கட்சியில் புதிதாக உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள காரைக்கேணி நடுத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் சிவக்குமாா் (44). இவ... மேலும் பார்க்க

மதுரை தனியாா் தங்கும் விடுதியில் தொழிலதிபா் உள்பட இருவா் தற்கொலை

மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் கோபிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபரும், அவரது இரண்டாவது மனைவியும் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை... மேலும் பார்க்க

கரோனா தொற்று பரவல்: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டு

தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில... மேலும் பார்க்க

காப்பகத்தில் தங்கியிருந்த 3 பெண்கள் மாயம்

சமூக நலத் துறை, காவல் துறை மூலம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். மதுரை புறவழிச் சாலை, சிருங்கேரி நகரில், தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா... மேலும் பார்க்க

காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூா் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் வீரணன் (65). விவசாயி. இவா் தனது தோட்டத்துக்க... மேலும் பார்க்க

பொதுத் துறை நிறுவனங்கள் தணிக்கை: ஒப்பந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

பொதுத் துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் குடியரசுத் தலை... மேலும் பார்க்க