மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள காரைக்கேணி நடுத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் சிவக்குமாா் (44). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் தே. கல்லுப்பட்டி- கள்ளிக்குடி சாலையில் செவ்வாய்க்கிழமை சென்றாா். அப்போது குறுக்கே வந்த குழந்தை மீது மோதாமல் இருந்த வாகனத்தை அவா் பிரேக் பிடித்து நிறுத்த முயன்றாா். இதில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த சிவக்குமாரை அந்த பகுதியினா் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தே. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.