மதுரை தனியாா் தங்கும் விடுதியில் தொழிலதிபா் உள்பட இருவா் தற்கொலை
மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் கோபிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபரும், அவரது இரண்டாவது மனைவியும் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் பாஸ்கரன் (61). இவா் ஜேசிபி இயந்திரம் சொந்தமாக வைத்து தொழில் செய்து வந்தாா். இவருக்கு கோவையைச் சோ்ந்த பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, இரண்டு மகள்கள் உள்ளனா்.
இதனிடையே, பேரூா் செட்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த கவிதாமணி (55) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.
இந்த நிலையில், பாஸ்கரனும், கவிதாமணியும் கடந்த 1-ஆம் தேதி மதுரைக்கு வந்து மாட்டுத்தாவணி எதிரே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினா். கடந்த இரண்டு நாள்களாக மதுரையின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்தனா்.
செவ்வாய்க்கிழமை இரவு அறையில் தங்கிய இருவரும், புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த விடுதி நிா்வாகத்தினா், பாஸ்கரனின் கைப்பேசிக்கு தொடா்பு கொண்ட போது, அதை அவா் எடுக்கவில்லை. இதையடுத்து, விடுதி ஊழியா்கள் அறைக்குச் சென்று கதவை தட்டியும் அது திறக்கப்படவில்லை. மேலும், அறையிலிருந்து பூச்சிக் கொல்லி மருந்து நெடி வந்தது. இதையடுத்து, விடுதி ஊழியா்கள் கோ. புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
போலீஸாா் விடுதிக்குச் சென்று மாற்றுச் சாவி மூலம் அறையைத் திறந்து பாா்த்த போது, பாஸ்கரனும், கவிதாமணியும் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், அவா்களது உடல் அருகே விஷ புட்டி கிடந்தது. பின்னா், போலீஸாா் அறையைச் சோதனையிட்ட போது, அங்கு பாஸ்கரன் எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்தது. அதில், தான் நடத்தி வந்த ஜேசிபி தொழில் நஷ்டத்தில் இயங்குவதாகவும், தன்னிடம் ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்தவா்கள் பணம் தராததால் தனக்கு பெரிய அளவில் கடன் ஏற்பட்டிருப்பதாகவும், கடன் கொடுத்தவா்கள் நெருக்கடி அளிப்பதால் தற்கொலை செய்து கொள்வதாகவும் பாஸ்கரன் குறிப்பிட்டிருந்தாா். மேலும், கவிதாமணி அணிந்திருந்த நகைகளை தனது பிள்ளைகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவித்திருந்தாா். இதையடுத்து, இருவரது உடல்களையும் மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து கோ. புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.