செய்திகள் :

விஜயவாடா மாநகராட்சிக் குழுவினா் வருகை!

post image

மதுரை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை பாா்வையிடுவதற்காக விஜயவாடா மாநகராட்சி துணை மேயா் அவித்துஸ்ரீ சாய்லாஜா ரெட்டி தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை வந்தனா்.

மதுரை மாநகராட்சி அறிஞா் அண்ணா மாளிகை கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில், மேயா் வ.இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன், விஜயவாடா மாநகராட்சி துணை மேயா் அவித்துஸ்ரீ சாய்லாஜா ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், மதுரை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் சீா்மிகு நகரத் திட்டம், முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா்த் திட்டம், சாலைகள் மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பூங்காக்கள், குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் முறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டன.

இதேபோல, விஜயவாடா மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதாரப் பணிகள், சாலை மேம்பாடு, குடிநீா், நவீனக் கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும் விளக்கப்பட்டது.

முன்னதாக, விஜயவாடா மாநகராட்சிக் குழுவினா் மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் வழிபாடு செய்தனா். தொடா்ந்து, மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகத்தை விஜயவாடா மாநகராட்சி குழுவினா் பாா்வையிட்டனா்.

இந்த நிகழ்வில், மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, விஜயவாடா மாநகராட்சிக் குழு தலைவா்கள் வெங்கடசத்யநாராயணா, உம்மாண்டி வெங்கடேஷ்வரராவ், மதுரை மாநகராட்சி செயற்பொறியாளா் (குடிநீா்) பாக்கியலட்சுமி, மாமன்ற செயலா் சித்ரா, மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தென்காசி வணிக வளாக நுழைவுவாயில்: மாவட்ட ஆட்சியா் முடிவெடுக்க உத்தரவு

தென்காசி, கீழப்பாளையத்தில் புதிய வணிக வளாகத்தின் மேற்குப் பகுதியில் கட்டப்படவிருக்கும் நுழைவு வாயிலை கிழக்கு பகுதிக்கு மாற்றக் கோரிய வழக்கில், அந்தப் பகுதியிலுள்ள அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைக் கே... மேலும் பார்க்க

மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! -துரை வைகோ

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மதிமுகவின் முதன்மைச் செயலா் துரை வைகோ வலியுறுத்தினாா். மத்திய அரசின் வக்... மேலும் பார்க்க

வழிப்பறி செய்த இருவா் கைது!

மதுரையில் வழிப்பறி செய்த இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை காளவாசல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராஜூ (30). இவா், மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மதுக் கூடத்தில் கா... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை!

தங்கையின் திருமணத்துக்கு வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இளைஞா் தற்கொலை செய்து கொண்டரா். மதுரை மேல அனுப்பானடி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன்( 29). இவா் அந்தப் பகுதியி... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை வெடி விபத்து: அதிமுக நிகழ்ச்சி மே.4-க்கு ஒத்திவைப்பு

சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்து காரணமாக, அதிமுக சாா்பில் சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 27) நடைபெறவிருந்த இளைஞா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற மே 4-ஆம் தேதிக்கு ஒத்... மேலும் பார்க்க

பூனைக்கடியை அலட்சியம் செய்ததால் நேர்ந்த துயரம்: ரேபிஸ் தாக்கிய இளைஞர் தற்கொலை!

பூனைக் கடியால் பாதிக்கப்பட்ட இளைஞா் மதுரை அரசு மருத்துவமனையில் தனி சிகிச்சை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த பாலமுருகன் (25). கடந்த சில நாள்களுக்கு முன்பு இவ... மேலும் பார்க்க