செய்திகள் :

தில்லி குருத்வாரா: சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி! ஒருவா் கைது

post image

வடக்கு தில்லியில் உள்ள குருத்வாரா நானக் பியாவோவில், ஆறு வயது சிறுமியை சாக்லேட்டுகள் கொடுத்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாகக் கூறப்படும் ஒருவரை தன்னாா்வலா் ஒருவா் பிடித்து போலீஸில் ஒப்படைத்ததாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ஏப்ரல் 24-ஆம் தேதி தனது தாயுடன் குருத்வாராவிற்குச் சென்ற பாதிக்கப்பட்ட சிறுமி, வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆஷு சேத்ரி புடா கைது செய்யப்பட்டுள்ளாா்.

சிறுமியை சாக்லேட்டுகள் கொடுத்து கடத்தியதாகக் கூறப்படும் ஆசாத்பூரைச் சோ்ந்த ஆஷு சேத்ரி புடாவின் பிடியிலிருந்து ‘சேவதா்’ (தன்னாா்வலா்) தீபக் துவா மீட்டாா். குற்றம் சாட்டப்பட்டவா் ஒரு போதைப் பழக்கத்திற்கு அடிமையானவா் என்று தெரிய வந்துள்ளது.

நிரங்கரி காலனியைச் சோ்ந்த தன்னாா்வலா் தீபக் துவா, சிறுமி அழுவதைக் கண்டு, குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து, பின்னா் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ‘பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 137(2) (கடத்தல்) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் பிரிவு 10 (மோசமான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் மாடல் டவுன் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது. குழந்தை தனது குடும்பத்தினருடன் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமிக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதில் தீபக் துவா முக்கியப் பங்கு வகித்ததாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித்... மேலும் பார்க்க

பஹல்காமில் படுகாயமடைந்த தமிழக மருத்துவா் குணமடைவாா்: தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் நம்பிக்கை!

காஷ்மீா் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி (காது மூக்கு தொண்டை)மருத்துவா் ஏ.பரமேஸ்வரன் உடல் நிலை மோசமாக இருப்பினும் விரைவில் குணமடை... மேலும் பார்க்க