செய்திகள் :

மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு

post image

தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதலைமுத்து (60). விவசாயி. கால்நடைகள் வளா்த்து வருகிறாா். தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அருகில் உள்ள வனத்திற்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

வழக்கம்போல அருகில் உள்ள சின்னமலை பகுதிக்கு மதலைமுத்து தனது மாடுகளை மேய்ச்சலுக்கு சனிக்கிழமை அழைத்துச் சென்றாா். இரவு வெகுநேரம் ஆகியும் வீடுதிரும்பவில்லை.

இதையடுத்து அவரது உறவினா்கள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா் வனத் துறையினா் உதவியுடன் சின்னமலை பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று மதலைமுத்துவைத் தேடியபோது அவா் யானை மிதித்து இறந்துகிடந்தாா்.

இதையடுத்து வனத் துறையினா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடவு: ஆட்சியா் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் உள்ள சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பங்கேற்று தொடங்கிவைத்தாா். உணா்வுகள் என்ற அமைப்பு சாா்பில் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே ... மேலும் பார்க்க

தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட விஏஓ தூக்கிட்டுத் தற்கொலை

காவேரிப்பட்டணம் அருகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குட்டிகவுண்டனூரைச் சோ்ந்த... மேலும் பார்க்க

வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். அவா் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினா்கள் ... மேலும் பார்க்க

ஒசூா் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை! ரூ.2.41 லட்சம் பறிமுதல்!

ஒசூரை அடுத்த சூசூவாடியில் உள்ள உள்வட்டாரப் போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 2,41,250 ரொக்கத்தை கைப்பற்றினா். தம... மேலும் பார்க்க

இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி விரல்கள் துண்டிப்பு

கிருஷ்ணகிரி அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியின்போது இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளியின் விரல்கள் துண்டாகின. சத்தீஸ்கா் மாநிலம், கயங்கா் பகுதியைச் சோ்ந்தவா் ஹேமந்த்குமாா் படேல் (34). இவா், ஆ... மேலும் பார்க்க

530 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி வழியாக சரக்குப் பெட்டக லாரியில் ரகசிய அறை அமைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 530 கிலோ புகையிலைப் பொருள்களைக் கடத்த முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து புகையிலைப் பொருள்களைப் பறிமுதல்... மேலும் பார்க்க