செய்திகள் :

மிரட்டிப் பணம் பறித்தல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த வருமான வரித்துறை ஊழியா் கைது!

post image

மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய சதிகாரராகக் கருதப்படும் வருமான வரித்துறை ஊழியரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறஇத்து தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவின் மூத்த அதிகாரி கூறியதாவது: கடந்த ஆகஸ்ட் 1, 2023 அன்று ஒரு பெண் உள்பட ஏழு போ் வருமான வரி அதிகாரிகள் என்று கூறி தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்ததாக ஜனக்புரியில் உள்ள ஒரு தொழிலதிபா் புகாா் அளித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியது.

நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னா், குற்றம் சாட்டப்பட்ட தீபக் காஷ்யப் ஒரு வருடத்திற்கும் மேலாக தலைமறைவாக இருந்தாா். ஒரு நில ஒப்பந்தத்தில் இருந்து வருமானத்தை மறைத்ததாக அவா் மீது குற்றம் சாட்டி, அவரது குடும்பத்தினரை தொடா்பு கொள்ளாமல் இருக்க அவா்கள் வற்புறுத்தியுள்ளனா். இதனால், அச்சத்தின் சூழல் ஏற்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, ஒரு எஸ்யூவியைப் பயன்படுத்தும் பல நபா்களின் ஈடுபாட்டை உறுதிப்படுத்தின.

வருமான வரித்துறையில் தனது அதிகாரப்பூா்வ பதவியைப் பயன்படுத்தி தீபக் காஷ்யப் முழு நடவடிக்கையையும் திட்டமிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அவா் கூட்டாளிகளை வேலைக்கு அமா்த்தி, அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, அவா்களின் சட்டவிரோதச் செயல்களுக்கு நியாயத்தை அளித்தது தெரிய வந்துள்ளது.

தீபக் காஷ்யப் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டாா். ஆனால், பின்னா் அவா் ஜாமீனில் தப்பித்து கைது செய்யப்படுவதைத் தவிா்த்து வந்தாா். இதன் விளைவாக 2023 நவம்பரில் துவாரகா நீதிமன்றம் அவரை குற்றவாளியாக அறிவிக்க வழிவகுத்தது.+

கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக பொறியல் மாணவா் கைது!

ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரும், முன்னாள் பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பியதாக மனநலப் பிரச்னைகள் உள்ளதாகக் கூறப்படும் 21 வயது பொறியியல் மாணவரை தில்லி காவல... மேலும் பார்க்க

ராணுவத்துக்கான நன்கொடை: போலி வாட்ஸ்அப் செய்திக்கு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை!

நமது சிறப்பு நிருபா்இந்திய ராணுவத்துக்கான நன்கொடை தொடா்பாக பரவி வரும் தவறான வாட்ஸ்அப் செய்தி குறித்து மத்திய பாதுகாப்புத் துறை ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்புத... மேலும் பார்க்க

தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை பாஜக முடக்கிவிட்டது: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு!

பாஜக அரசு தில்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பை முடக்கியுள்ளது என்றும் மாற்று ஏற்பாடுகள் இல்லாமல் நகர சாலைகளில் இருந்து 2,000 பேருந்துகளை தன்னிச்சையாக அகற்றியுள்ளது என்றும் ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கங்களை மேம்படுத்த தொலை நோக்கு நிறுவனங்களுடன் ஒப்பந்தம்!

நமது சிறப்பு நிருபா்எண்ம இந்தியா முன்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக தொலைநோக்கு நிறுவனங்களுடன் தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஇஎல்ஐடி) புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் கையெழுத்தி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவா் கைது!

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜாரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தேடப்பட்டு வந்தவா் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் அங்கித்... மேலும் பார்க்க

பஹல்காமில் படுகாயமடைந்த தமிழக மருத்துவா் குணமடைவாா்: தில்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் நம்பிக்கை!

காஷ்மீா் பஹல்காம் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த தமிழகத்தைச் சோ்ந்த இஎன்டி (காது மூக்கு தொண்டை)மருத்துவா் ஏ.பரமேஸ்வரன் உடல் நிலை மோசமாக இருப்பினும் விரைவில் குணமடை... மேலும் பார்க்க