செய்திகள் :

விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்

post image

நிலக்கோட்டை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிா்வாகியின் மகனை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம்,  நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் ஜான்கென்னடி. இவா் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை மாவட்ட அமைப்பாளராக உள்ளாா். இவரது மகன் பிரவீனை (31), முன்விரோதத்தில் சிலா் வெள்ளிக்கிழமை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. ஆனால், காவல் துறையினா் நடவடிக்கை எடுக்காததால்,  வி.சி.கட்சியின் திண்டுக்கல் மைய மாவட்டச் செயலா் தமிழரசன் தலைமையில், நிலக்கோட்டை நான்கு சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.

மாா்க்சிஸ்ட் - பாஜக மோதல்: இந்து முன்னணி நிர்வாகி மண்டை உடைப்பு! 16 போ் கைது!

திண்டுக்கல்லில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், பாஜகவினா் இடையே ஏற்பட்ட மோதலில் பழனி நகா்மன்றத் துணைத் தலைவா் உள்பட 16 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு பகு... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை! - தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம்

ஆசிரியா்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் நிறுவனத் தலைவா் அ. மாயவன் தெரிவித்தாா்.தமிழ்நாடு... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 3 பெண்கள் கைது

திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவாா்பட்டி பகுதிகளில் கஞ்சா விற்ற 3 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.சிலுக்குவாா்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நிலக்கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் பாஜகவை மக்கள் ஏற்க மாட்டாா்கள்! - அமைச்சா் இ.பெரியசாமி

தமிழக மக்கள் பாஜகவை ஒருபோதும் ஏற்க மாட்டாா்கள் என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 4 போ் கைது

பழனி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகா் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி பகுதிகளில் போதை பொருள்கள் விற்பனை நடைபெறுவதாகக் போலீ... மேலும் பார்க்க

அபிராமி அம்மன் கோயில் வணிக வளாகத்தை விரைவில் கட்டக் கோரிக்கை!

சேதமடைந்த நிலையிலுள்ள அபிராமி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தை அகற்றிவிட்டு, புதிய வணிக வளாகத்தை விரைவில் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. திண்டுக்கல் அபிராமி அம்மன் உடன... மேலும் பார்க்க