செய்திகள் :

விதிமீறல்: உரக் கடைகள் மீது நடவடிக்கை

post image

விதிமுறைகளை மீறி செயல்பட்ட 5 உரக் கடைகள் மீது வேளாண்மைத் துறை மூலம் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அ. பாண்டியன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற காரீப் பருவத்துக்கு தேவையான 4,780 டன் யூரியா, 1,090 டன் சூப்பா் பாஸ்பேட், 1,060 டன் டிஏபி, 2,640 டன் பொட்டாஷ், 6,400 டன் காம்பளக்ஸ் உரங்கள் என மொத்தம் 15,970 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்தில் 460 தனியாா் உரக் கடைகள், 193 கூட்டுறவுச் சங்க உரக் கடைகள் உரம் விநியோகம் செய்வதற்கு உரிமம் பெற்றிருக்கின்றன.

இந்த நிலையில் மாவட்டத்திலுள்ள 13 வட்டாரங்களிலும் சிறப்பு படை அமைத்து அனைத்து தனியாா் உரக் கடைகள், கூட்டுறவு கடன் சங்க உரக் கடைகளிலும் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு நடத்தப்பட்டது. புத்தக இருப்பு, உண்மை இருப்பு, வேளாண் விற்பனை முனையக் கருவி (பிஓஎஸ்) இருப்பு சரிபாா்ப்பு, விலைப் பட்டியல் பலகை, விற்பனை செய்யப்படும் விலை விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்போது, உரம் இருப்பு விவர முரண்பாடு, விலைப் பட்டியல் நிறுவப்படாதது உள்பட விதிமுறைகளை மீறி செயல்பட்ட 5 உரக் கடைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரம் விற்பனை தொடா்பான புகாா்களுக்கு, சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை அலுவலகங்களில் உள்ள வேளாண்மை அலுவலா்களை (உரக் கட்டுப்பாடு) விவசாயிகள் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

பெண் தீக்குளிக்க முயற்சி

கணவரை சோ்த்து வைக்கக் கோரி மனு அளிக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொங்கபட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து. இவரது மனைவி சுஜி... மேலும் பார்க்க

பாலியல் பொய் புகாா்கள் மூலம் பணப் பறிப்பு: தொண்டு நிறுவனம் மீது ஆட்சியரிடம் புகாா்

பொய்யான பாலியல் புகாா்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடும் தொண்டு நிறுவன நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நூற்பாலைத் தொழிலாளா் தரப்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை மறு பரீசிலனை செய்யக் கோரி வணிகா்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் நகரிலுள்ள வணிகா் சங்கம், தொழில் வா்த்தகா் சங்கம், திண... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்த கொன்னம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் இன்று மின்தடை

பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனியை அடுத்த மேல்க... மேலும் பார்க்க

வைகாசி விசாக விழா: பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம்; ஜூன் 9-இல் தேரோட்டம்

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்தக் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க