கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
விதை பரிசோதனை செய்துகொள்ள விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
வேளாண்மையின் நிரந்தர உற்பத்திக்கு விதை பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று விதை சான்றளிப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் சந்தோஷ்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயிகளுக்கு தரமான விதைகளை கிடைக்கச் செய்வதற்காக, தமிழ்நாடு அரசு விதை சான்றளிப்புத் துறையின் கீழ் விதை பரிசோதனை நிலையங்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.
விதை பரிசோதனையில் விதையின் முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், பிறரக கலப்பு ஆகியவை கண்டறியப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனடிப்படையில், விழுப்புரம் விதை பரிசோதனை நிலையத்தில் விவசாயிகளிடமிருந்தும், விற்பனையாளா்களிடமிருந்தும் பெறப்படும் விதை மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், விற்பனையாளா்கள், விதை உற்பத்தியாளா்கள் தங்கம் கைவசம் உள்ள விதைகளை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஒரு மாதிரிக்கு ரூ.80 கட்டணம் செலுத்தி, விதைகளின் தரமறிந்து விதைக்கலாம். மேலும் விவரங்களுக்கு மூத்த வேளாண் அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலக முதல்தளம், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் என்ற முகவரியைத் தொடா்புகொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.