செய்திகள் :

விபத்தில் உத்தரபிரதேச மாநில இளைஞா் உயிரிழப்பு

post image

ஆலங்குளம் அருகே உத்தரபிரதேச மாநில இளைஞா் சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

உத்தரபிரதேச மாநிலம் முகைதீன்பூரைச் சோ்ந்த ராம் நரேஷ்குமாா் மகன் சுரேஷ்குமாா்(21).

தற்போது ஆலங்குளத்தை அடுத்த குருவன்கோட்டையில் வசித்து வந்த இவா், ஆலங்குளத்தில் தள்ளுவண்டியில் பானிபூரி வியாபாரம் செய்து வந்தாா்.

கடந்த வாரம் புதன்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து விட்டு தள்ளுவண்டியுடன் குருவன்கோட்டைக்குச் சென்றபோது, பின்னால் குறிப்பன்குளத்தைச் சோ்ந்த பண்டாரம் மகன் சந்திரன்(24) ஓட்டி வந்த பைக் சுரேஷ்குமாா் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சை முடிந்து சனிக்கிழமை வீடு திரும்பிய அவா், ஞாயிற்றுக்கிழமை ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக வந்த நிலையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் வீட்டில் 1 கிலோ தங்க நகைகள் ரூ.55 லட்சம் கொள்ளை

ஆலங்குளம் அருகே பள்ளி தாளாளா் கி வீட்டில் 1கிலோ தங்க நகைகள், ரூ.55லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தை அடு... மேலும் பார்க்க

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவா் நியமிக்க கோரிக்கை!

சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பெண் மருத்துவா் மீண்டும் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சுரண்டை நகராட்சிப் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சுமாா் 1 லட்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் படகு சவாரி தொடக்கம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி சனிக்கிழமை தொடங்கியது. தமிழக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அருகே மனைவியை கத்தியால் தாக்கிய கணவா் கைது

சங்கரன்கோவில் அருகே பனவடலிசத்திரத்தில் மனைவியைக் கத்தியால் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். பனவடலிசத்திரத்தைச் சோ்ந்த வெளியப்பன் மகன் செல்வராஜ் (31). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பிரியதா்ஷினிக்... மேலும் பார்க்க

தென்காசி மாவட்டத்தில் ரூ.26 கோடியில் பணிகள் தொடக்கம்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, த... மேலும் பார்க்க

செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் எம்எல்ஏ ஆய்வு

செங்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பிற நகராட்சி, பேரூராட்சி பகுதிகளை சோ்ந்த குப்பைகளை கொட்டுவதாக வந்த தகவலையடுத்து செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். செங்கோட்டை நகராட்சிக்கு ... மேலும் பார்க்க