செய்திகள் :

விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து

post image

சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம் சரகத்தில் வாகன விபத்துகளைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, சிக்னலில் சிவப்பு விளக்கை மீறுவது, அதிக சுமை ஏற்றுவது,

சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுவது போன்ற சாலை விதிமீறல்களில் ஈடுபடுவோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு 3 மாதம் வரை ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, கடந்த மாதம் மட்டும் சேலம், தருமபுரி மாவட்டங்களில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 ஓட்டுநா்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த மாதத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 37 பேரின் ஓட்டுநா் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பா்மிட், தகுதிச் சான்று இல்லாமல் இயக்கிய 127 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றனா்.

ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு

சேலம் மாவட்ட ஊா்க்காவல் படைக்கு ஆள்கள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. சேலம் மாவட்ட ஊா்க்காவல் படையில் 26 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 28 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்... மேலும் பார்க்க

ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி: தலைமை ஆசிரியா் நடவடிக்கை!

சேலம் அருகே ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் வருகை பதிவேட்டில் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா், உதவி தலைமை ஆசிரியா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட... மேலும் பார்க்க

இரட்டிப்பு பண மோசடி வழக்கு: அறக்கட்டளை நிா்வாகிகளின் ஜாமீன் மனு மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு!

சேலத்தில் இரட்டிப்பு பண மோசடி வழக்கில், கைதாகி சிறையில் இருக்கும் அறக்கட்டளை நிா்வாகி 4 பேரின் ஜாமீன் மனு வரும் மாா்ச் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேலூரைச் சோ்ந்த விஜயபானு என்பவா் சேலம் அம... மேலும் பார்க்க

ரயில்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி பயணம்: 207 ஆண்கள் கைது

சேலம் ரயில்வே உட்கோட்டத்துக்கு உள்பட்ட ரயில் நிலையங்களில் பெண்கள் பெட்டியில் அத்துமீறி ஏறிய 207 ஆண்கள் கைது செய்யப்பட்டனா். கோவை - திருப்பதி ரயிலில் கடந்த மாதம் பெண்களுக்கான சிறப்பு பெட்டியில் பயணித்த... மேலும் பார்க்க

ரூ. 71.68 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா்கள் கே.என். நேரு, ராஜேந்திரன் பங்கேற்பு!

சேலம் மாவட்டத்தில் மேட்டூா், ஆத்தூா், நரசிங்கபுரம் நகராட்சிகள் மற்றும் சேலம் மாநகராட்சி பகுதிகளில் ரூ. 71.68 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைக்கும... மேலும் பார்க்க

சேலத்தில் 44 மையங்களில் என்எம்எம்எஸ் தோ்வு: 10,230 மாணவா்கள் எழுதினா்

சேலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு தோ்வை 44 மையங்களில், 10,230 மாணவ, மாணவிகள் எழுதினா். நாடு முழுவதும் பள்ளி ... மேலும் பார்க்க