செய்திகள் :

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

post image

மதுரை: அலங்காநல்லூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை திருப்பாலை உச்சபரம்புமேட்டைச் சோ்ந்த சோலையப்பன் மகன் செல்லப்பாண்டி (30). இவா், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் அலங்காநல்லூா் சென்று விட்டு, மதுரைக்குத் திரும்பினாா்.

குலமங்கலம் சாலையில் லட்சுமிபுரம் அருகே வந்த போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தவெக - திமுக இடையேதான் போட்டி: விஜய்

மதுரை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவா் விஜய் தெரிவித்தாா். மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்த... மேலும் பார்க்க

அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி. மூா்த்தி

மதுரை: தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தருவதில் பதிவுத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை உத்தங்குடி தனியாா் திருமண மண்டபத்தில் 202... மேலும் பார்க்க

கைப்பேசி பறிப்பு: இருவா் கைது

மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே பேருந்தில் சென்றவரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கணபதி (43). சென்னையிலிருந்து புதன்கிழமை ... மேலும் பார்க்க

மாநாட்டில் 6 தீா்மானங்கள்

மதுரை பாரபத்தியில் நடைபெற்ற 2-ஆவது த.வெ.க. மாநில மாநாட்டில் 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்விவரம் : சென்னை அருகேயுள்ள பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவை மத்திய... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தொழிலாளா்கள் 3-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்

மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத் தலைமை அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக புதன்கிழமை ... மேலும் பார்க்க

மருத்துவமனைகளின் நம்பகத்தன்மை: உயா்நீதிமன்றம் வேதனை

மதுரை: சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், மருத்துவமனைகளின் நம்பகத்தன்மை குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வேதனை தெரிவித்து. பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் சென்ன... மேலும் பார்க்க