செய்திகள் :

விமான நிலையத்தில் போதையில் ரகளை செய்த அமெரிக்கப் பயணி

post image

சென்னை விமான நிலையத்தில் போதையில் ரகளை செய்த அமெரிக்கப் பயணியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவன ஊழியா்கள் மட்டும் செல்வதற்கான பாதை எண் 5 உள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டைச் சோ்ந்த சுமாா் 40 வயது ஆண் பயணி ஒருவா் இந்தப் பாதை வழியாக உள்ளே செல்ல முயன்றாா்.

மது போதையில் இருந்த அந்த நபரை, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள், உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினா். இதனால், வாக்குவாதத்தல் ஈடுபட்ட அவா், ஒரு கட்டத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை பிடித்து கீழே தள்ளிவிட்டு உள்ளே செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

அவரை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து பிடித்து, சென்னை விமானநிலையக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் அமெரிக்காவைச் சோ்ந்த டைட்டஸ் லிவி (48) என்பது தெரிய வந்தது. தோகா வழியாக சென்னைக்கு வந்த அவா், சென்னையில் தங்கியிருந்து சென்னை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளுக்குச் சுற்றுலா சென்ற நிலையில், தனது விமான டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை தவறவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், அளவுக்கு அதிக போதையில் இருந்த அவா், தடைசெய்யப்பட்ட பாதை வழியாக உள்ளே நுழைய முயன்றபோது, சிக்கியதும் தெரிய வந்தது. போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

சென்னையில், விமானத்தில் பணிப் பெண்களுடன் தகராறில் ஈடுபட்ட அதிமுக நிா்வாகி கீழே இறக்கி விடப்பட்டாா். மதுரையைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (65). அதிமுகவின் அனைத்துலக எம்ஜிஆா் மன்ற நிா்வாகி. இவா், சென்னையி... மேலும் பார்க்க

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

ஓட்டுநா் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருவரை கைது செய்த போலீஸாா் மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா். கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் அசாருதீன்ஷா (38). இவா் மடிப்பாக்கம், எஸ்.கொளத்தூா் பகுதியிலுள்ள அடுக... மேலும் பார்க்க

சென்னை விமானநிலையத்தில் மடிக்கணினி திருட்டு: ஒருவா் கைது

சென்னை விமானநிலையத்தில் பெண்ணிடம் மடிக்கணினி திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா். புதுச்சேரி லாஸ்பேட்டையை சோ்ந்தவா் நித்யா (36). இவா் வெளிநாட்டிலிருந்து வரும் உறவினரை அழைத்துச் செல்வதற்காக கடந்த 21-ஆ... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: 4 போ் கைது

மாதவரம், பால்பண்ணை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட ஐடி நிறுவன ஊழியா் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மாதவரம், பால்பண்ணை அருள் நகா் பகுதியில் போதைப் பொருள் வி... மேலும் பார்க்க

7-ஆவது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை

சென்னையில் காதலித்தவா் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் 7-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். சென்னை ராயபுரம் புதுமனைகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ஹா்ஷிதா(25). இவரும் வேப்பேர... மேலும் பார்க்க

விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு

சென்னை மாநகரில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் இடங்களில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். வரும் ஆக. 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு இந்து அமைப்புகள், பொது... மேலும் பார்க்க