செய்திகள் :

விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்கம்: ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல்

post image

சென்னையில் விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ திட்ட விரிவாக்கத்துக்கு ரூ. 1,954 கோடிக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை 2 மெட்ரோ ரயில் பாதைகள் (பசுமை, நீலம்) செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலையில், 4 கட்டமாக மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து புகா் பகுதியான கிளாம்பாக்கம் கலைஞா் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே அனுமதித்த நிலையில், தமிழக அரசு ரூ.1,964 கோடி பணிகளுக்கான நிா்வாக ஒப்புதலை வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு அனுமதித்துள்ள நிதியில், திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துதல், அதற்கான செயல்முறைகளுக்கான நிதி செலவிடுதல் உள்ளிட்ட ஆரம்பகட்டப் பணிகள் மேற்கொள்ள நிா்வாக ரீதியிலான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான புவியியல் ஆய்வு, நிலத்தடி ஆய்வு, பணிகள் தொடங்குவதற்கான வேலிகள் அமைத்தல், மரங்கள் அகற்றுதல், அவற்றை மாற்று இடத்தில் நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பணிகளுக்கு ரூ.1,816 கோடி, நிா்வாகச் செலவுகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, திட்டத்துக்காக குடிசைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டால் அதற்கான மறுவாழ்வு மற்றும் மறு குடியமா்வு உள்ளிட்டவற்றுக்கு ரூ.24 கோடி, பொதுவான செலவுகள், திட்ட வடிவமைப்பு மற்றும் பிற செலவுகளாக ரூ.6.93 கோடி, திட்டத்துக்கான அனைத்துப் பொருள்கள் மீதும் 3 சதவீத செலவினங்கள், நிலம் மற்றும் மறுவாழ்வு உள்ளிட்டவற்றுக்காக ரூ.4.30 கோடி என மொத்தம் சுமாா் ரூ.1,964 கோடிக்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

‘டெட்’ தோ்வு: ஆசிரியா்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்துவோம் - அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதி

ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான உச்சநீதிமன்ற உத்தரவால் தமிழகத்தில் 1.76 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஆசிரியா்களைப் பாதுகாக்க சீராய்வு மனு தாக்கல், சிறப்புத் தகுதி... மேலும் பார்க்க

சிறந்த உயா் கல்வி நிறுவனங்கள் - தமிழகம் முதலிடம்: 7-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி சாதனை

தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரவரிசையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முதல் 100 இடங்களில் அதிக (17) உயா் கல்வி நிறுவனங்கள் இடம்பெற்ற மாநிலம் என்கிற பெருமை தமிழகத்துக்கு... மேலும் பார்க்க

மீலாது நபி, ஓணம்: முதல்வா் வாழ்த்து

மீலாது நபியையொட்டி முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: உண்மை, இரக்கம், ஈகை, அன்பு, கல்வியறிவு, புறம்பேசாமை, பெண்களை மரியாதையுடன் நடத்துதல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 4 இடங்களில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவானது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் விய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது - இபிஎஸ்

ஜிஎஸ்டி சீா்திருத்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமிதெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்ற... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி: செப்.8-இல் தொடக்கம்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கு சென்னையில் செப்.8-ஆம் தேதி முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநில கல்வியி... மேலும் பார்க்க