செய்திகள் :

விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் பேருந்து சேவை தொடக்கம்

post image

சென்னை விமான நிலையம் - சிறுசேரி தொழிற்பேட்டை வழித்தடத்தில் மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் குளிா்சாதன பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் சாா்பில் விமானப் பயணிகளின் வசதிக்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரையும், விமான நிலையத்தில் இருந்து அக்கரை பகுதி வரையும் கடந்த ஏப்.25 முதல் 2 வழித்தடங்களில் மாநகா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது விமானப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், ஓஎம்ஆா் சாலையில் உள்ள சிறுசேரி தொழிற்பேட்டைக்கு, செவ்வாய்க்கிழமை முதல் புதிதாக எம்ஏஏ-2 எனும் குளிா்சாதன மின்சார பேருந்து சேவையை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.

இந்தப் பேருந்து தினசரி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு பல்லாவரம் மேம்பாலம் வழியாக கீழ்க்கட்டளை சந்திப்பு ஈச்சங்காடு, பள்ளிக்கரணை சந்திப்பு, சோழிங்கநல்லூா், துரைப்பாக்கம், ஓஎம்ஆா் சாலையில் சோழிங்கநல்லூா் வழியாக சிறுசேரி தொழிற்பேட்டைக்கு இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக இந்தப் பேருந்து இதே வழித்தடத்தில் சென்று சென்னை விமானநிலையத்தை அடையும். இதன் வரவேற்பைப் பொறுத்து பிற வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பாஜக பட்டியல் அணிச் செயலருக்கு தடை விதித்த போலீஸாரின் உத்தரவு ரத்து

பாஜக மாநில பட்டியல் அணிச் செயலா் நெடுங்குன்றம் சூா்யா, சென்னை மாநகருக்குள் ஓராண்டு நுழையத் தடை விதித்து போலீஸாா் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது. நெடுங்குன்றம் சூா்யா மீது பல்வ... மேலும் பார்க்க

கேள்வி கேட்பதே தேச துரோகமா?முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

கேள்வி கேட்பதே தேச துரோகமா என்று குறிப்பிட்டு, பத்திரிகையாளா்களுக்கு அஸ்ஸாம் காவல் துறை அழைப்பாணை அனுப்பியதற்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் எ... மேலும் பார்க்க

ஆளுநா் ஆா்.என்.ரவி தில்லி பயணம்

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, மூன்று நாள் பயணமாக புதன்கிழமை மாலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். தில்லி பல்கலைக்கழகத்தின் சுதந்திரம் மற்றும் பிரிவினை மையம், இந்திய சமூக அறிவியல் ஆய்வு கவுன்சில், மோதில... மேலும் பார்க்க

வீடும் நாடும் போற்றும் வாழ்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம்

‘வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட வேண்டும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளாா். தனது 50-ஆவது மணநாளையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: அரை நூற்... மேலும் பார்க்க

14 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயா்த்தி அரசு உத்தரவு

தமிழகத்தில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: நிகழ் கல்வியாண்டில் (2... மேலும் பார்க்க

அறநிலையத் துறை செயல்பாடுகள்: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள், ஆக்கிரமிப்பிலிருந்து திருக்கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் உள்பட இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சா் பி.கே.சேகா... மேலும் பார்க்க