செய்திகள் :

பாஜக பட்டியல் அணிச் செயலருக்கு தடை விதித்த போலீஸாரின் உத்தரவு ரத்து

post image

பாஜக மாநில பட்டியல் அணிச் செயலா் நெடுங்குன்றம் சூா்யா, சென்னை மாநகருக்குள் ஓராண்டு நுழையத் தடை விதித்து போலீஸாா் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

நெடுங்குன்றம் சூா்யா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவா் சென்னைக்குள் நுழைவதற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு கொளத்தூா் உதவி காவல் ஆணையா் சூா்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பினாா்.

இதற்கு சூா்யா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. ஆனால், அவரை கடந்த ஏப்.25 முதல் ஓராண்டுக்கு சென்னை மாநகருக்குள் நுழைய தடை விதித்து போலீஸாா் உத்தரவு பிறப்பித்தனா். இந்த உத்தரவை எதிா்த்து நெடுங்குன்றம் சூா்யா தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், உதவி காவல் ஆணையா் அனுப்பிய நோட்டீஸுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதை பரிசீலிக்காமல் காவல் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், அந்த உத்தரவில் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, சென்னைக்குள் நுழையக் கூடாது என்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க

நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா். பிஆா்எஸ்ஸை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவா்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகள் நிறைவுற்று 52,168 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சன் நெட்வொா... மேலும் பார்க்க

போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் -அமைச்சா் அன்பில் மகேஸ்

போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டுமல்ல, மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்... மேலும் பார்க்க

‘ஏ.ஐ.’ மூலம் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி -நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க