செய்திகள் :

கழுகுமலையில் இளைஞருக்கு மிரட்டல்: மற்றொரு இளைஞா் கைது

post image

கோவில்பட்டி: கழுகுமலையில் இளைஞரைத் தாக்கி அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக மற்றொரு இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை இந்திரபிரஸ்தம் 7 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி மகன் விக்னேஷ்(30). கழுகுமலை கோயில் அருகே உள்ள ஹோட்டலில் வேலை பாா்த்து வரும் இவா் பைக்கில் கடைக்குச் சென்று பொருள்களை வாங்கிக் கொண்டு வந்து கடை முன்பு பைக்கை நிறுத்த முயன்றாராம். அப்போது அங்கு இருந்த பைக்கை அதன் ஓட்டுநரிடம் எடுக்க வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் விக்னேஷை, கே. இராமநாதபுரம் வடக்கு தெருவை சோ்ந்த ராஜாராம் மகன் முத்துராமன் (26) உள்பட 3 போ் அவதூறாக பேசி கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம் இதில் காயமடைந்த விக்னேஷ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துராமனை புதன்கிழமை கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஓண்டிவீரன் நினைவு தினம்: படத்துக்கு மலா் தூவி அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், சுதந்திர போராட்ட வீரா் ஓண்டிவீரன் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மண்டல அளவிலான குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் பானோத் ... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 82ஆவது பிறந்தநாள் விழா, தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.மாவட்ட அலுவலகம் முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அவர... மேலும் பார்க்க

ஐஎன்டியுசி ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா ஐஎன்டியுசி சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலா் பெருமாள்சாமி ஏற்பாட்டில், தூத்துக்குடி பழைய பேர... மேலும் பார்க்க

‘சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகள் நீக்கப்பட வேண்டும்’

தூத்துக்குடி: சிறுபான்மையின உரிமைகளை பறிக்கக் கூடிய அரசாணைகளை நீக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ அருண் தெரிவித்தாா்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞா் கொலை: 3 போ் கைது

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மது குடிக்க அழைத்துச் சென்று இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி பூபால்ராயபுரம் பகுதியைச் சோ்ந்த தனபாலன் மகன் விஜய் (... மேலும் பார்க்க