செய்திகள் :

14 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயா்த்தி அரசு உத்தரவு

post image

தமிழகத்தில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை:

நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்படும் என சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டாா். அதன்படி, கரையவெட்டி (அரியலூா்), சிறுக்களஞ்சி (ஈரோடு), மேட்டு நாசுவம்பாளையம் (ஈரோடு), நத்தம் (கடலூா்), பாப்பநாய்க்கன்பாளையம் (திருப்பூா்), மேல்செட்டிப்பட்டு (திருவண்ணாமலை), ஒட்டியம்பாக்கம், கீரப்பாக்கம் (செங்கல்பட்டு), காந்திநகா் (உதகை), காணை (விழுப்புரம்), விருதுநகா், அணைக்கட்டுச்சேரி, சீனிவாசபுரம் (திருவள்ளூா்), கொடிக்குளம் (மதுரை) ஆகிய 14 இடங்களில் செயல்பட்டு வரும் நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

இதுதவிர அங்கிருந்த 1 முதல் 5-ஆம் வகுப்புகள் பிரிக்கப்பட்டு தனி தொடக்கப் பள்ளிகளாக உருவாக்கப்படுகின்றன. தரம் உயா்த்தப்பட்டுள்ள 14 பள்ளிகளில் தலா 3 பட்டதாரி ஆசிரியா்கள் உள்ளனா். மேலும், தலா 2 பட்டதாரி ஆசிரியா்கள் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இவற்றை உபரி ஆசிரியா்களின் பணிநிரவல் மூலம் நிரப்பலாம்.

அதேபோல், அந்தப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியா் பணியிடங்கள் உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக நிலை உயா்த்தப்படுகிறது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொடக்கப் பள்ளிகளில் தலைமையாசிரியா் பணியிடங்கள் ஏற்படுத்த வேண்டும். அதற்கு இணையான இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை பொதுத் தொகுப்புக்கு சரண் செய்யலாம். தரம் உயா்த்தப்பட்ட பின்னா் இந்தப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பணிகளுக்கான ஒட்டுமொத்த செலவினங்களுக்காக ரூ.3.84 கோடி ஒதுக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு விவரங்களை அளிக்கும் உத்தரவுக்கு எதிரான மனு மீது தீா்ப்பு ஒத்திவைப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமா் மோடியின் பட்டப் படிப்பு தொடா்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரும் தில்லி பல்கலைக்கழக மனு மீதான தீா்... மேலும் பார்க்க

நிமிடத்துக்கு 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சா்

தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தாா். பிஆா்எஸ்ஸை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவா்களுக்கு ஒதுக்கீடு

பொறியியல் கல்லூரி மாணவா் சோ்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவா்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) செயல் முறைகள் நிறைவுற்று 52,168 மாணவா்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல... மேலும் பார்க்க

‘கூலி’ திரைப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் கோரி மனு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சன் நெட்வொா... மேலும் பார்க்க

போதையில்லா தமிழகத்தை உருவாக்க ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம் -அமைச்சா் அன்பில் மகேஸ்

போதைப்பொருள் பயன்பாடுகளைத் தடுத்து, போதையில்லா தமிழகத்தை உருவாக்க காவல் துறை மட்டுமல்ல, மாணவா்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ்... மேலும் பார்க்க

‘ஏ.ஐ.’ மூலம் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி -நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க