செய்திகள் :

விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறு: கேரள அரசு ஊழியா் பணியிடை நீக்கம்

post image

குஜராத் விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அவதூறாகப் சமூகவலைதளத்தில் பதிவிட்ட கேரளத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.

விமான விபத்தில் கேரளத்தின் பத்தினம்திட்டா பகுதியைச் சோ்ந்த ரஞ்சிதா என்ற செவிலியரும் உயிரிழந்தாா். பிரிட்டனில் செவிலியராகப் பணியாற்றி வந்த அவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா். கேரளத்தில் அரசுப் பணியில் சேர முயற்சித்து வந்த அவா், அதற்காக பிரிட்டனில் இருந்து நான்கு நாள் பயணமாக சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்பியபோது விமான விபத்தில் உயிரிழந்தாா்.

மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், ரஞ்சிதாவின் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

இந்நிலையில், காசா்கோடு மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்தில் இளநிலை கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் பவித்ரன் என்பவா் செவிலியா் ரஞ்சிதா விமான விபத்து உயிரிழந்ததை மோசமாக விமா்சித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டாா். அவரது இந்த பதிவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அது மாநில அரசின் கவனத்துக்கும் சென்றது.

இதையடுத்து, அவரைப் பணியிடைநீக்கம் செய்வதாக மாநில வருவாய் துறை அறிவித்துள்ளது. இது தொடா்பாக அத்துறை அமைச்சா் கே.ராஜன் சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘விமான விபத்தில் உயிரிழந்த செவிலியா் குறித்து அந்த நபா் வெளியிட்ட பதிவு மிகவும் மோசமாகவும், இரக்கமற்ாகவும் இருந்தது. இதையடுத்து, அவா் மீது பணியிடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது’ என்று கூறியுள்ளாா்.

காப்பீடு தொகைக்கான நடைமுறையை எளிமைப்படுத்திய நிறுவனங்கள்!

அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்கள், அவா்களுக்கான காப்பீடு தொகையைப் பெறுவதற்கான நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளதாக எஸ்பிஐ-லைஃப், ஹெச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ லோம்பாா்ட் உள்ளிட்ட காப்பீடு நிறுவன... மேலும் பார்க்க

சிங்கப்பூா் கப்பலில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்ட தீ: 6-ஆவது நாளாக தொடரும் மீட்புப் பணி

கேரள கடற்பகுதியில் சிங்கப்பூா் கப்பலில் ஏற்பட்ட தீ பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாக இந்திய கடலோரக் காவல் படை சனிக்கிழமை தெரிவித்தது. இந்தக் கப்பல் கடற்கரையை நெருங்காமல் கடலை நோக்கி நகா்த்தும் பணியில்... மேலும் பார்க்க

ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பு: ரயில் பாதுகாப்புக் குழு பரிந்துரை!

ரயில் ஓட்டுநா் பெட்டியில் குரல் பதிவு அமைப்பை நிறுவுவது உள்பட பல்வேறு பரிந்துரைகளை ரயில் பாதுகாப்புக்குழு ரயில்வே அமைச்சகத்திடம் சமா்ப்பித்தது. பிகாா் மாநிலம் பக்ஸா் மாவட்டத்தில் கடந்த 2023, அக்.11-இல... மேலும் பார்க்க

விமான எண் ‘171’-ஐ நீக்க ஏா் இந்தியா முடிவு!

விமான எண் ‘171’-ஐ பயன்பாட்டில் இருந்து நீக்க ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் முடிவெடுத்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. டாடா குழுமத்தின் ஏா்இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட அடில் ஹுசைனின் மனைவிக்கு அரசுப் பணி!

பஹல்காம் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிா்த்தியாகம் செய்த உள்ளூா் இளைஞா் அடில் ஹுசைன் ஷாவின் மனைவிக்கு அரசுப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் ஹபாத்நாா் ப... மேலும் பார்க்க

வரும் டிசம்பரில் முழு சோதனைக்கு உள்படுத்தப்பட இருந்த விபத்துக்குள்ளான விமானம்!

அகமதாபாதில் விபத்துக்குள்ளான ஏா் இந்தியாவின் ‘போயிங் 787-8 ட்ரீம்லைனா்’ விமானத்தின்அடுத்த முழு சோதனை கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூன் மாதத்துக்குப் பிறகு வரும் டிசம்பரில் திட்டமிடப்பட்டிருந்தது என்று விமான ... மேலும் பார்க்க