செய்திகள் :

விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்

post image

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

இதையும் படிக்க: ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?

18 ஆண்டுகளாக கோப்பைக்கானத் தேடலில் உள்ள இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால், இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக, கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி அணி இறுதிபோட்டியில் விளையாடியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி முதலும், கடைசியுமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடியது. தற்போது அந்த அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

விராட் கோலிக்காக... ஆர்சிபி கேப்டன் கூறுவதென்ன?

9 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி முன்னேறியுள்ள நிலையில், ஆர்சிபிக்காக பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் விளையாடி வரும் விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம். பல ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி வருகிறார். இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம். எப்போதும் விஷயங்களை எளிமையாக கையாள்வது எனக்குப் பிடிக்கும். எங்கு விளையாடினாலும் அது எங்களது சொந்த திடலில் விளையாடுவது போன்ற உணர்வைத் தருகிறது. பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆர்சிபிக்காக தங்களது சிறப்பான ஆதரவை அளித்து வருகிறார்கள் என்றார்.

இதையும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, எந்த அணி முதல் முறையாக கோப்பையை வெல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அடுத்த சீசனில் 2 மடங்கு நன்றாக விளையாடுவேன்: வைபவ் சூர்யவன்ஷி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 14 வயதான வைபவ் சூர்யன்ஷி இந்த சீசனில் முதல்முறையாக விளையாடினார். 7 போட்டிகளில் 252 ரன்கள் குவித்துள்ள இவர் 206.6 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி அசத்தினார். இந்தப் போட்டிகளில் அத... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது: கபில் தேவ்

பெங்களூரில் நடைபெற்ற விபத்து குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கொண்டாட்டத்தை விட உயிர் முக்கியமானது எனக் கூறியுள்ளார். ஆர்சிபி அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் க... மேலும் பார்க்க

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்! - ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுமென ஆர்சிபி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. பெங்களூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

முற்றிலும் உடைந்துவிட்டேன்: விராட் கோலி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் ரசிகர்கள் பலியான சம்பவத்துக்கு ஆர்சிபி வீரர் விராட் கோலி வருத்தம் தெரிவித்துள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்களுரூவில் மாநில அரசு ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டியில் சாம்பியன்: விராட் கோலிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி வீரா் விராட் கோலிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பு... மேலும் பார்க்க

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறும் ஆர்சிபி ரசிகர்கள்: போலீஸ் தடியடி!

பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறி நுழைய முயன்ற ஆர்சிபி ரசிகர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி திடலில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் நேற்றிரவு நடைபெற்ற... மேலும் பார்க்க