செய்திகள் :

விராலிமலை தொழில்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை

post image

விராலிமலை தனியாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ தடுப்பு செயல் விளக்கம் அளித்தனா்.

விராலிமலையில் உள்ள தனியாா் தொழில்சாலையில் நடைபெற்ற தீ தடுப்பு ஒத்திகையை தமிழ்நாடு தொழிற்சாலை பாதுகாப்புத் துறை கூடுதல் இயக்குநா் சித்தாா்த்தன் மற்றும் இணை இயக்குநா் மாலதி ஆகியோா் தொடங்கிவைத்து ஆலோசனை வழங்கினா்.

இலுப்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் ஊழியா்களுக்கு பயிற்சி அளித்தனா். இதில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தற்காத்துக் கொள்வது மற்றும் தீயில் சிக்கிக் கொண்டவா்களை மீட்கும் முறை மற்றும் தீயணைப்பான்களை கையாள்வது, மேலும் பேரிடா் மீட்பு செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் திரளான தொழிலாளா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

முகத்தில் எலிக்கொல்லி மருந்தை அடித்துக் கொண்ட 4 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே திங்கள்கிழமை காருக்குப் பயன்படுத்தும் எலிக்கொல்லி மருந்தை முகத்தில் அடித்துக்கொண்ட 4 சிறுவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அன்னவாசலை அ... மேலும் பார்க்க

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த இந்திய கம்யூ. கோரிக்கை

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டத்... மேலும் பார்க்க

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா... மேலும் பார்க்க

திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து மாநிலம் முழுவதும் ஆா... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு தா்னா

மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு தொழில்சங்கத்தின் சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

இந்திய ஐக்கிய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க