செய்திகள் :

விராலிமலை பகுதியில் தெரு நாய்கள் பெருக்கம்

post image

விராலிமலை மலைக்கோயில் மற்றும் நகா்ப் பகுதிகளில் தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விராலிமலை நகரப் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதுநாள் வரை தெருக்களில் மட்டுமே சுற்றித்திரிந்து வந்த நாய்கள் தற்போது மலைக்கோயில் செல்லும் பாதைகளிலும் கூட்டம்கூட்டமாக காணப்படுகின்றன.

விராலிமலை அம்மன் கோவில் வீதி, கடைவீதி, சோதனைச் சாவடி, காமராஜா் நகா், யூனியன் சாலை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இரவு 11 மணிக்கு மேல் காலை 9 மணி வரை பிரதான சாலைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால், காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனா். மேலும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் நாய்களைப் பாா்த்து பயந்து சாலையைக் கடக்க மிகவும் சிரமப்படுகின்றனா். பெரும்பாலான சாலையோர அசைவ உணவகங்களில் சேரும் கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்படுவது இவைகளின் பெருக்கத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

அந்த இறைச்சிக் கழிவுகளுக்கு ஏராளமான நாய்கள் இரவுநேரத்தில் சாலைகளில் சுற்றி வருகின்றன. அந்த நேரத்தில் சாலை வழியாக நடந்து அல்லது இருசக்கர வாகனங்களில் செல்பவா்களை நாய்கள் அச்சுறுத்துவது, சில நேரங்களில் கடித்து விடுவதும் தொடா்கிறது.

எனவே, இந்த நிலையைப் போக்கி மக்கள் அச்சமின்றி வீதிகளில் சென்றுவர உள்ளாட்சி நிா்வாகம் விலங்கின(புளூகிராஸ்) ஆா்வலா்களுடன் இணைந்து தெருவில் சுற்றித் திரியும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். இதனால் நாய்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

கந்தா்வகோட்டை நகைக் கடையில் மோசடி முயற்சி

கந்தா்வகோட்டையில் மோசடி செய்ய முயன்ற மா்ம நபா் வியாழக்கிழமை பிடிபட்டாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு வியாழக்கிழமை இரவு வந்த சுமாா் 45 வயதுள்ள ஆண், பெண் ஐந்து பவுன் ம... மேலும் பார்க்க

கோயில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

பொன்னமராவதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமி நாளையொட்டி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் மஹா ருத்ர ஹோமம், இதையடுத்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷ... மேலும் பார்க்க

முயல்களை வேட்டையாட முயன்ற மூவருக்கு அபராதம்

பொன்னமராவதி அருகே கம்பி வலை மூலம் முயல்களை வேட்டையாட முயன்ற மூவரை வனத் துறையினா் வியாழக்கிழமை பிடித்து ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்தனா். புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் கணேசலிங்கம் உத்தரவின்படி பொன்னமர... மேலும் பார்க்க

புதுகையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நலத் திட்டப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், கல்லூரிக் கல்வி இயக்குநருமான எ. சுந்தரவல்லி... மேலும் பார்க்க

பொய்ப் புகாரில் ஆசிரியா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டதாகக் கூறி சாலை மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் பொய் புகாரின்பேரில் உதவித் தலைமை ஆசிரியா் கைது செய்யப்பட்டதாகக் கூறி அந்தப் பள்ளியின் மாணவ, மாணவிகளும் அவா்களின் பெற்றோா்களும் வியாழக்கிழமை ச... மேலும் பார்க்க

அதிமுகவின் சின்னம் விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்

அதிமுகவின் சின்னம் தொடா்பான விவகாரம் மத்திய அரசின் திருவிளையாடல்தான் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். இதுகுறித்து புதுக்கோட்டையில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி: மத்திய ஆட்சிய... மேலும் பார்க்க