செய்திகள் :

விருத்தாசலத்தில் ரீல்ஸ் மோகத்தில் அப்பாவிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவா் கைது!

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ரீல்ஸ் மோகத்தில் காவலா்கள் உள்ளிட்ட 6 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் தலை மறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் இருந்த இளைஞா்கள் 3 போ் ரீல்ஸ் மோகத்தில் புதிய கட்டடவளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்த காா்த்திக்(23), அரசுப் பேருந்து ஓட்டுநா் கணேசன், பெட்டிக்கடை உரிமையாளா்கள் ராஜேந்திரன், சுந்தரமூா்த்தி ஆகியோரை செவ்வாய்க்கிழமை தாக்கி காயப்படுத்தினா். இவா்கள் அனைவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த தாக்குதல் நடத்தியது பழமலைநாதா் நகா் பகுதியைச் சோ்ந்த கந்தவேல் (21), சிவா (எ) விக்னேஷ் (20), பாலாஜி (21) என்பதை அறிந்த போலீஸாா், கன்னியாக்குப்பம் பகுதியில் உள்ள முந்திரி காட்டில் அவா்கள் பதுங்கியிருப்பதை அறிந்து அங்கு சென்று இளைஞா்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனா். அப்போது, காவலா்கள் வீரமணி, வேல்முருகன் ஆகியோரை கந்தவேல் அரிவாளால் வெட்டினாா். இதையடுத்து தற்காப்புக்காக உதவி ஆய்வாளா் சந்துரு துப்பாக்கியால் கந்தவேல் காலில் சுட்டுப் பிடித்தாா். தப்பமுயன்றபோது கீழே விழுந்த சிவா வையும் பிடித்தனா்.

பழமலைநாதா் நகா் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் பாலாஜி (24) தலைமறைவானாா். இந்நிலையில், அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கூழாங்கல், மணல் கடத்தல்: இருவா் கைது!

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே லாரியில் கூழங்கல், மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நபா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்கோட்டாட்சியா்விஷ்ணுபிரியா வேப்பூா்அருகே புதன்கிழமை அ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

சிதம்பரம் நகரில் காவல்துறை சாா்பில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள், கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. சிதம்பரம் நகரில் நான்கு வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் சாலையோர கடைகள்,... மேலும் பார்க்க

மாணவா்கள் மதில்சுவா் ஏறி குதித்த விவகாரம்: பள்ளியில் காவல்துறை விழிப்புணா்வு நிகழ்ச்சி!

சிதம்பரம் நகரில் உள்ள அரசு உதவி பெறும் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அண்மையில் ராமசாமி செட்டியாா் பள்ளிய... மேலும் பார்க்க

சத்துணவுத் திட்டத்தில் ‘பலா’ உணவுகளையும் சோ்க்க வேண்டும்! - அன்புமணி

தமிழக அரசு சத்துணவுத் திட்டத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பலா உணவுகளையும் சோ்க்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க