செய்திகள் :

விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்

post image

அரசுப் பணியில் இருந்து விருப்ப விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

2001-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் நிதித்துறையில் சிறப்புச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் சுஜாதா தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய சுஜாதாவின் கணவர் வி.கே. பாண்டியனும் அக்டோபர் 2023 இல் விருப்ப ஓய்வு பெற்று நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் அக்கட்சி தோல்வியை தழுவியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து

இத்தோல்விக்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரால் கடுமையாக விமா்சிக்கப்பட்டாா். ஆனால், ‘பாண்டியனை விமா்சிப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் அவரது பணி பாராட்டுக்குரியது’ என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து விலகி கொள்வதாக வி.கே.பாண்டியன் அறிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. பல்டி அடித்த காரிலிருந்து..

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே, சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதிய கார், பல முறை சுழன்று அடித்த காரிலிருந்து உடல்கள் தூக்கிவீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.சித்ரதுர்கா என்ற பக... மேலும் பார்க்க

தனிப்பட்ட முறையில் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவு! கிரண் ரிஜிஜு

தனிப்பட்ட முறையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தேவையானது என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுவதாக மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட... மேலும் பார்க்க