செய்திகள் :

விரைவில் இந்தியாவுடன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும்: ராஜ்நாத் சிங்

post image

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங்,

"மேட் இன் இந்தியா' எனும் திட்டம்தான் நாட்டிற்கு மிகப்பெரிய பாதுகாப்பை அளிக்கிறது. இந்தத் திறன் நம்மிடம் இல்லையென்றால் பாகிஸ்தானுக்கு எதிராக இவ்வளவு பெரிய நடவடிக்கையை எடுத்திருக்க முடியாது.

முதலில் பயங்கரவாத மறைவிடங்களை அழித்தோம். பின்னர் விமானத் தளங்களை அழித்தோம். நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்திருக்கலாம். ஆனால் அதிகாரத்துடன் கட்டுப்பாடும் இருந்திருக்க வேண்டும். நாம் நிதானத்தைக் கடைப்பிடித்தோம்.

இன்று பயங்கரவாதத்தின் விளைவை பாகிஸ்தான் உணர்ந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை நாங்கள் மாற்றியிருக்கிறோம். இனிமேல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடக்கும்போது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேசுவோம். பாகிஸ்தானுடன் வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் இருக்காது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் சுயமரியாதையுடனும் தங்கள் சொந்த விருப்பத்துடனும் இந்தியாவில் சேரும் நாள் வெகுதொலைவில் இல்லை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி மக்கள் நம்முடையவர்கள். அவர்கள் நம் குடும்பத்தின் ஒரு பகுதியினர். பிரதமரின் 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற தொலைநோக்குப் பார்வையில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இன்று புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள், ஒரு நாள் நிச்சயமாக சுயமரியாதையுடனும் தங்கள் சொந்த விருப்பத்துடனும் இந்தியாவுக்கு வருவார்கள். அங்குள்ள பெரும்பாலான மக்கள் இந்தியாவுடனான தொடர்பை உணர்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் ஒரு சிலரே.

அன்பு, ஒற்றுமை, உண்மையின் பாதையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் விரைவில் சேரும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பேசியுள்ளார்.

பாஜக கூட்டணிக்காக அன்புமணி, செளமியா காலை பிடித்து அழுதனர் -ராமதாஸ்

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க