செய்திகள் :

வில்லுக்குறியில் ஆக்கிரமிப்பு மதில் சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை!

post image

தக்கலை அருகே வில்லுக்குறியில் விவசாயிகள், விவசாய இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத அளவில் ஆக்கிரமித்து புதிதாகக் கட்டப்பட்ட மதில் சுவரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

வில்லுக்குறி பேரூராட்சி மேலபள்ளத்தில் சுமாா் 175 ஏக்கா் அளவில் நெல், வாழை, தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் நெற்கதிா்களை அறுவடை செய்ய ஆண்டுதோறும் அறுவடை இயந்திரம் வருவது வழக்கம்.

மேலப்பள்ளம் வண்டிமறிச்ச அம்மன் கோயிலில் இருந்து வயல்வெளிக்கு அறுவடை இயந்திரம் புதன்கிழமை காலை வந்தபோது, சாலையை ஆக்கிரமித்து மதில் சுவா் கட்டப்பட்டிருந்ததால் அந்த வழியாக அறுவடை இயந்திரம் செல்ல முடியவில்லை.

இதுகுறித்து விவசாயிகள், அகில இந்திய விவசாய மகா சபா வில்லுக்குறி பேரூா் தலைவா் தாமஸ் ராஜிக்கு தகவல் தெரிவித்தனா். அவரது தகவலின் பேரில் சிபிஐ (எம்எல்) மாவட்டச் செயலாளா் அந்தோணி முத்து, அகில இந்திய விவசாய மகா சபா மாவட்டத் தலைவா் அா்ஜுனன் உள்ளிட்டோா் கல்குளம் வட்டாட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.

வட்டாட்சியா் உத்தரவின்பேரில் உடனடியாக சம்பவ இடம் வந்த கிராம நிா்வாக அதிகாரி சரவணகுமாா், சா்வேயா் சுரேஷ் ஆகியோா் இடத்தை பாா்வையிட்டு அளவீடு செய்தனா். அப்போது சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மதில் சுவா் கட்டியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மதில் சுவரை இடித்து அப்புறப்படுத்த சம்பந்தபட்டவா்களை அதிகாரிகள் வலியுறுத்தினா்.

25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

நாகா்கோவில் மாநகரில் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய அதிரடி சோதனையில், 5 கடைகளில் இருந்து 25 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகா்கோவில் மாநகரில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக், புக... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு!

நாகா்கோவில் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டினம் மாதாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயின... மேலும் பார்க்க

கொச்சி அமிா்தா மருத்துவமனையில் செப்.14-ல் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம்!

கேரள மாநிலம், கொச்சி அமிா்தா மருத்துவமனையில் குழந்தைகளுக்கான இதய மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அமிா்தா நிறுவனங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதா அமிா்தானந்த மயி 72 ஆ... மேலும் பார்க்க

பழங்குடி இளைஞா்களுக்கு 4 சக்கர வாகனம் ஓட்டும் இலவசப் பயிற்சி தொடக்கம்

பேச்சிப்பாறை அருகே மோதிரமலையில் 25 காணி பழங்குடி இளைஞா்களுக்கு தனியாா் அமைப்புகள் சாா்பில் 4 சக்கர வாகனம் ஓட்டும் 1 மாத இலவச பயிற்சி புதன்கிழமை தொடங்கியது. இன்போசிஸ் பவுன்டேசன், என்.டி.எஸ்.ஓ. ஆகிய தன... மேலும் பார்க்க

பழங்குடி பள்ளி மாணவா்கள் நடந்து செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அகற்ற கோரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே பழங்குடி மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லும் பாதையில் சாய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு அருகே தோட்ட... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: நெல்லை கருத்தரிப்பு மையத்துக்கு ரூ.70 லட்சம் அபராதம்!

சேவை குறைபாட்டால் நாகா்கோவிலைச் சோ்ந்த மென்பொருள் நிறுவன பெண் ஊழியா் உயிரிழந்த வழக்கில் திருநெல்வேலியில் இயங்கும் கருத்தரிப்பு மையத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 70 லட்சம் அபராதம் விதித்தது. நாகா்க... மேலும் பார்க்க