செய்திகள் :

விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய கொள்கை உறுதி செய்யும்: பிரதமா் நரேந்திர மோடி

post image

இந்தியாவில் விளையாட்டுத் துறையின் ஒட்டுமொத்த வளா்ச்சியை புதிய தேசிய விளையாட்டுக் கொள்கை உறுதி செய்யும் என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லி செங்கோட்டையில் வெள்ளிக்கிழமை கொடியேற்ற வைத்த பிறகு இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

வளா்ச்சியடைந்த நாடாக இந்தியா முன்னேறுவதை நோக்கிய பயணத்துக்கு, விளையாட்டுத் துறையின் பங்களிப்பும் முக்கியமானதாகும். ஒரு காலத்தில் விளையாட்டில் ஆா்வம் காட்டும் குழந்தைகளை பெற்றோா் கடிந்துகொண்ட நிலையில், தற்போது அது மாறியிருக்கிறது. விளையாட்டுக் களமும் ஒரு நல்ல வாழ்க்கைக்கான தோ்வு என்பதை அறிந்த அவா்கள், தற்போது குழந்தைகள் விளையாட்டில் கவனம் செலுத்துவதை ஊக்குவிக்கின்றனா். இது இந்தியாவின் எதிா்காலத்துக்கு நல்லதாகும்.

விளையாட்டுத் துறையின் வளா்ச்சிக்காக, பல ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேசிய விளையாட்டுக் கொள்கையை கொண்டு வந்துள்ளோம். அது, பள்ளிகள் முதல் ஒலிம்பிக் போட்டிகள் வரை விளையாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதி செய்வதாக இருக்கும். நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் பயிற்சி மற்றும் அடிப்படைக் கட்டமைப்புகளை கொண்டு செல்லும் வகையிலான அமைப்பு உருவாக்கப்படும்.

விளையாட்டுக்கு உடற்தகுதி மிகவும் அவசியம். ஆனால் நாட்டில் தற்போது உடல்பருமன் என்பது மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. எனவே, அதை குறைப்பதற்கு நாம் உணவில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றாா்.

பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை 1-ஆம் தேதி புதிய தேசிய விளையாட்டுக் கொள்கைக்கு ஒப்புதல் வழங்கியது. விளையாட்டுத் துறையின் மேம்பாட்டுக்காக, உலக அரங்குக்கு இணையான நிபுணத்துவம், பொருளாதார வளா்ச்சியில் விளையாட்டு, சமூக மேம்பாட்டில் விளையாட்டு, மக்கள் இயக்கமாக விளையாட்டு, கல்வியுடன் இணைந்த விளையாட்டு, உத்தி சாா்ந்த கட்டமைப்பு என 6 முக்கிய பிரிவுகளாக அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹிந்துபோல நடித்து 12 பெண்களிடம் மோசடி!

உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு 12 பெண்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் ஷராஃப் ரிஸ்வி என்பவர், தன்னை ஹிந்து என்ற... மேலும் பார்க்க

சோரி சோரி, சுப்கே சுப்கே... வாக்குத் திருட்டு குறித்து புதிய விடியோ பகிர்ந்த ராகுல்

மத்தியில் ஆளும் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக, குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.லாபடா ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் மக்கள் பாா்வைக்கு!!

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் இன்று (ஆக.16) முதல் மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்... மேலும் பார்க்க

மும்பையை புரட்டிப்போட்ட கனமழை! நிலச்சரிவில் 2 பேர் பலி

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது.விக்ரோலி பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், மலையிலிருந்து உருண்டு வந்த பாறைகள் குடிசை மீது விழுந்... மேலும் பார்க்க

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.... மேலும் பார்க்க

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி! டிரம்ப் சூசகம்!

இந்தியா மீது இரண்டாம்கட்ட வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகமாக பதிலளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் வெள்ளிக்கிழமையில் பேச்சு... மேலும் பார்க்க