செய்திகள் :

விளையாட்டுத் துறை புதிய திட்டங்கள்: துணை முதல்வா் ஆலோசனை

post image

விளையாட்டுத் துறை சாா்பிலான பெரும் திட்டங்கள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனையில் சென்னைக்கு அருகே

அமையவுள்ள உலகளாவிய விளையாட்டு நகரம், கோயம்புத்தூரில் சா்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது ஆகியன குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

புதிய திட்டங்களின் இப்போதைய நிலை, திட்டங்களை விரைந்து செயல்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில், தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், துணை முதல்வரின் செயலா் பிரதீப் யாதவ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவா் அசோக் சிகாமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சென்னைக்கு அருகே உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக முன்னெடுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. இதேபோன்று, கோவையிலும் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரகோசமங்கை கும்பாபிஷேக கூட்ட நெரிசலில் 45 சவரன் கொள்ளை!

ராமநாதபுரம், உத்தரகோசமங்கை கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் கூட்ட நெரிசலில் பக்தர்களிடமிருந்து சுமார் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற ச... மேலும் பார்க்க

'ஒன்றுமே தெரியாமல் விஜய் பேச வேண்டாம்; கேஸ் விலையேற்றம் மிகக்குறைவுதான்' - தமிழிசை

கேஸ் விலையேற்றத்துக்கு எதிரான தவெக தலைவர் விஜய்யின் அறிக்கை பற்றி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமரிசித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் கூறியதாவது:எங்கள் மாநிலத் தலைவரின் அற... மேலும் பார்க்க

டாஸ்மாக் சோதனை: உச்ச நீதிமன்றத்திலிருந்து மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு!

சென்னை: டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றத்திலேயே தொடர்ந்து நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் தெ... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி: கனிமொழி

ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் உரிமைக்கான வெற்றி என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ... மேலும் பார்க்க

48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு வலுகுறையும்: வானிலை மையம்

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக வலுகுறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், நேற்ற... மேலும் பார்க்க

ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாமா? அமைச்சர் சிவசங்கர் பதில்

ஆண்களும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் திட்டம் கொண்டுவரப்படுமா என்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்டக் கேள்விக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார்.தமிழக முதல்வராக... மேலும் பார்க்க