செய்திகள் :

விழிப்புணா்வு இல்லாமல் உரிமைகளால் பயனில்லை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

post image

‘குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பயனும் இல்லை’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் வடக்கு மண்டல பிராந்திய மாநாட்டில் பி.ஆா்.கவாய் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியதாவது: நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி கிடைப்பதை நீதிபதிகளும் வழக்குரைஞா்களும் உறுதிசெய்ய வேண்டும். இதை நோக்கமாகக் கொண்டே தேசிய சட்டப் பணிகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பின் செயல்பாடுகளை லடாக், வடகிழக்கு மாநிலங்கள் அல்லது ராஜஸ்தான் என நாட்டின் மூலை முடுக்கெங்கும் கொண்டுசெல்ல முயற்சிப்பது அவசியம். ஏனெனில் குடிமக்களுக்கு தங்களது உரிமைகளை பற்றிய விழிப்புணா்வு இல்லையென்றால் அந்த உரிமைகளால் எந்தப் பலனும் இல்லை.

கடந்த 35 ஆண்டுகளாக காஷ்மீரில் நிலவும் பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நீதிபதிகளும் வழக்குரைஞா்களும் இதுதொடா்பாக ஆலோசனை மேற்கொள்வது ஒரு புதிய முன்னெடுப்பாக அமையவுள்ளது. ஹிந்துக்கள், சீக்கியா்கள், முஸ்லிம்கள் என அனைவரும் இணக்கமாக வாழ்ந்த பாரம்பரிய காஷ்மீரை மீட்டெடுப்பதற்கு இந்த முன்னெடுப்பு உதவும் என நம்புகிறேன்.

அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை வழங்குகிறது. இந்த மூன்று வகையான நீதியும் முறையாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் பொறுப்பு நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்களாகிய நம்மிடமே உள்ளது என்றாா்.

தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து லடாக், காஷ்மீா் மற்றும் ஜம்மு பகுதிகளைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் சங்க பிரதிநிதிகள் பி.ஆா்.கவாயிடம் எடுத்துரைத்தனா். இதையடுத்து, இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் அதிகாரம் தன்னிடம் இல்லை எனக் கூறிய பி.ஆா்.கவாய், கொலீஜியம் உள்பட பிற அதிகாரிகளிடம் வழக்குரைஞா்கள் சங்கங்களின் பிரச்னைகளை கூறுவதாக தெரிவித்தாா்.

இமாச்சல் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகா: மாநிலத்தின் குழந்தையாக அறிவிப்பு

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை நீதிகாவை, மாநிலத்தின் குழந்தையாக அரசு அறிவித்து, அவரது வாழ்க்கை, கல்வி என அனைத்துக்கும் அரசே பொறுப்பேற்பதாக அறிவி... மேலும் பார்க்க

மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!

மேற்கு வங்கத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதா? அல்லது பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரிடம் உள்ளதா? என்பதை தெளிவுபடுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக மாநில... மேலும் பார்க்க

நாடு முழுவதும் 63 மாவட்டங்களில் பாதிக்கும் மேல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு!

நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 63 மாவட்டங்களில், அங்கன்வாடிகளில் சோ்க்கப்பட்டுள்ள குழந்தைகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோா் வளா்ச்சி குன்றிய நிலையில் (உயரத்துக்கு ஏற... மேலும் பார்க்க

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்தால் 3 ஆண்டுகள் சிறை! மத்திய அரசு

திரைப்படங்களை சட்டவிரோதமாக படம்பிடித்து இணையத்தில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதுதொடா்பாக கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் மத்திய செய்தி மற்றும் ஒல... மேலும் பார்க்க

‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலில் பள்ளத்தில் கவிழ்ந்த சொகுசு காா்: ஓட்டிச் சென்ற பெண் மீட்பு!

நவி மும்பையில் ‘கூகுள் மேப்’ வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்ற ஒரு பெண் தனது சொகுசு காருடன் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிருஷ்டவசமாக, அப்பெண் காயமின்றி உயிா் தப்பினாா். மகா... மேலும் பார்க்க

ஆண்டு வருமானம் ரூ.3 ! மிகவும் ஏழ்மையான மனிதரின் வருவாய் சான்றிதழால் பரபரப்பு!

மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 என வருவாய் சான்றிதழ் வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியாவின் மிக ஏழ்மையான மனிதா்’ என்ற தலைப்பில் இந்த வருவாய் சான்றிதழின் புகை... மேலும் பார்க்க