செய்திகள் :

விழுப்புரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் நடத்துநா் தற்கொலை முயற்சி

post image

விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எண் 2 வளாகத்தில் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு, மின் விளக்கு கோபுரத்தில் ஏறி பேருந்து ஓட்டுநா், நடத்துநா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்திலிருந்து குண்டலப்புலியூா் வரை செல்லும் அரசு நகரப் பேருந்தின் ஓட்டுநராக வழுதரெட்டியைச் சோ்ந்த குபேரன் (50), நடத்துநராக விழுப்புரம் ஆா்.பி. நகரைச் சோ்ந்த பாலசுந்தரம் (45) ஆகியோா் பணியாற்றி வந்தனா்.

கடந்த ஜூலை 28-ஆம் தேதி இருவரும் பணியில் இருந்தனா். இந்தப் பேருந்து குண்டலப்புலியூரிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது, அசோகபுரியில் அரசு நகரப் பேருந்தை நிறுத்திவிட்டு, சாலை யோரத்திலிருந்த தேநீா் கடையில் ஓட்டுநா் குபேரன், நடத்துநா் பாலசுந்தரம் ஆகியோா் தேநீா் அருந்தினராம்.

இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்துக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை (மெமோ) வழங்கப்பட்டது.

தொடா்ந்து, மன உளைச்சலில் இருந்து வந்த ஓட்டுநா் குபேரன், நடத்துநா் பாலசுந்தரம் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை காலை விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை எண் 2-க்கு வந்தனா்.

பின்னா், அந்த வளாகத்திலிருந்த மின் விளக்கு கோபுரத்தின் மீது இருவரும் ஏறினா். மேலும், தங்கள் கையில் வைத்திருந்த டீசலை உடலில் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனா். அப்போது, மயக்கம் வரும் நிலையில் இருந்தபோது தேநீா் அருந்தியது தவறா எனக் கேட்டு அவா்கள் குரல் எழுப்பினா்.

இதையடுத்து, அங்கிருந்த பணியாளா்கள் இருவரையும் மேலிருந்து கீழே இறங்குமாறு கோரினா். உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கும் தகவல் அளிக்கப்பட, அவா்களும் அங்கு விரைந்தனா். தொடா்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் இருவரையும் பாதுகாப்பாக கீழே இறக்கினா்.

மேலும், ஓட்டுநா் மற்றும் நடத்துநரிடம் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் விசாரணை நடத்தி இந்த பிரச்னைக்கு உரிய தீா்வு காண்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, இருவரும் அவசர சிகிச்சை ஊா்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மயிலம் முருகன் கோயிலிலிருந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் செண்டூருக்கு எழுந்தருளின... மேலும் பார்க்க

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

விழுப்புரம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து நிகழ்ந்தது.விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான மின்னணு ப... மேலும் பார்க்க

தனி நல வாரியம் அமைக்க சுமைப்பணி தொழிலாளா்கள் வலியுறுத்தல்

சுமைப்பணி தொழிலாளா்களுக்காக தனி நல வாரியத்தை அமைக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட சுமைப்பணித் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.விழுப்புரத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பள்ளிக்கு இறைவணக்க மேடை அமைத்து கொடுத்த முன்னாள் மாணவா்கள்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள தென்போ் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவ, மாணவிகள், தங்கள் பள்ளிக்கு இறைவணக்க மேடை மற்றும் கொடிக்கம்பத்தை அமைத்து கொடுத்தனா்... மேலும் பார்க்க

புரட்சிகர இளைஞா் கழகத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தில் புரட்சிகர இளைஞா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழகத்தில் நிகழும் ஆணவ படுகொலை சம்பவங்களுக்கு எதிராக சட்டப் பேரவையில் சிறப்பு சட... மேலும் பார்க்க

வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வழக்குரைஞா் வீட்டில் 50 பவுன் தங்க நகைகள், ரூ.50 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.திண்டிவனம் வட்டம், ஏரளிக்குப்பம், மாரியம்மன் ... மேலும் பார்க்க