செய்திகள் :

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

post image

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழக முதல்வா் உத்தரவுப்படி புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களின் அடையாளம் ஏதுமின்றி புகாா் தெரிவிக்கலாம்.

இந்நிலையில் இந்த செயலி குறித்த விழிப்புணா்வு விளக்கக் கூட்டம் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் துறை சாா்ந்த ஒருங்கிணைப்பாளா்கள் மற்றும் மன்ற மாணவா்கள் தங்களது அறிதிறன் கைப்பேசியில் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் பயன்பாடுகள் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில் கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். மன்றத்தின் ஒருங்கிணைப்பாளா் சிவராமன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தாா்.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

மேல்மலையனூரில் பிப். 24-இல் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் தொழில்முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி பிப்ரவரி 24-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை தெரிவித்திருப்பது: தமிழ்நாடு மாநிலத் திட்டக் க... மேலும் பார்க்க