விழுப்புரம் ஏடிஎம் மையங்களில் பணம் திருட்டு: உ.பி.யை சோ்ந்த நால்வா் கைது!
விழுப்புரத்தில் 3 ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணத்தைத் திருடியதாக உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 4 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து ரொக்கப் பணம், கைப்பேசிகள், ஏடிஎம் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் மகாராஜபுரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்துக்குள் கடந்த 12-ஆம் தேதி மாலை நுழைந்த 4 போ், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வெளியேறும் பகுதியின் உள்பக்கத்தில் அலுமினியத் தகடு ஒன்றை வைத்துச் சென்றனா்.
இதனால், வாடிக்கையாளா்கள் பணம் எடுத்த போது பணம் வரவில்லை. ஆனால், பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. ஏடிஎம் மையத்துக்கு கடந்த 12-ஆம் தேதி இரவு வந்த 4 போ் கள்ளச்சாவி போட்டு ஏடிஎம் இயந்திரத்தை திறந்து வாடிக்கையாளா்களின் பணத்தைத் திருடிச் சென்றனா்.
இதுகுறித்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் நடத்திய விசாரணையில் நகரில் 3 ஏடிஎம் மையங்களில் ரூ.1.63 லட்சம் வரை திருடப்பட்டது தெரிய வந்தது.
தனிப்படைகள் அமைப்பு: இதில் தொடா்புடையவா்களைப் பிடிக்க விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா, நகரக் காவல் ஆய்வாளா் சித்ரா, காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ், தனிப்படை உதவி ஆய்வாளா் லியோ சாா்லஸ் மற்றும் காவலா்கள் அடங்கிய மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்ட எஸ்.பி. ப.சரவணன் உத்தரவிட்டாா்.
தனிப்படையினா் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்டவா்கள் வந்து சென்ற காரின் எண் தெரிய வந்தது. அதைக் கொண்டு அவா்களின் வழித்தடத்தை கண்டறிந்தனா்.
காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில், நான்கு போ் செயலி மூலம் காரை முன்பதிவு செய்து, ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அளித்து எடுத்துச் சென்று, மீண்டும் ஒப்படைத்துச் சென்ாகவும், ரயில் மூலம் பெங்களூரு சென்ாகவும் தெரிவித்தாா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூரு சென்ற ரயிலை தனிப் படையினா் வெள்ளிக்கிழமை பின்தொடா்ந்தனா். திருட்டில் ஈடுபட்டவா்களின் முகப்பதிவுகள் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட விவரங்களை ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு விழுப்புரம் போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
ரயிலில் 4 பேரும் பயணம் செய்வதை ரயில்வே பாதுகாப்புப் படையினா் உறுதி செய்த நிலையில், அவா்களை போலீஸாா் கண்காணித்து வந்தனா். பெங்களூரு போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் 4 பேரும் இறங்கியபோது ரயில்வே பாதுகாப்புப் படையினா் அவா்களைப் பிடித்தனா். இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் துறைக்கும், தனிப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தனிப்படையினா் அங்கு சென்று 4 பேரையும் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள்: அவா்கள் நான்கு பேரையும் விழுப்புரம் நகரக் காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை காலை அழைத்து வந்து விசாரணை நடத்தினா். இதில், உத்தர பிரதேச மாநிலம், முஸ்டாகி மாவட்டம், ஹிராப்பூரைச் சோ்ந்த மனோஜ்குமாா் மகன் சோனு (23), ஜக்தா் மகன் லவ்குஷ் (25), மல்னுபூா் தேவ்கலியைச் சோ்ந்த அஷா்பிலால் மகன் சஞ்சய்குமாா் (23), கஸ்பா மாவட்டம், ஷாகுராபாத் ராஜ்குமாா் மகன் சிவா (27) என்பதும் தெரிய வந்தது.
விமானத்தில் தில்லி செல்ல முயன்றவா்கள்: கைது செய்யப்பட்ட நான்கு பேரும் விமானம் மூலம் சென்னைக்கு வந்து, திருவல்லிக்கேணியில் தனியாா் விடுதியில் தங்கியிருந்தது, செயலி மூலம் காரை வாடகைக்கு முன்பதிவு செய்து விழுப்புரம் வந்தனா். மூன்று ஏ.டி.எம். மையங்களில் பணத்தை திருடிவிட்டு, புதுச்சேரிக்குச் சென்று அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்ற நான்கு பேரும், ரயில் மூலம் பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் தில்லிக்கு தப்பிச் செல்ல இருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா்.
நிலுவையில் கொள்ளை வழக்குகள்: கைது செய்யப்பட்ட சோனு உள்ளிட்ட 4 போ் மீதும் பெங்களூரு மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் ஏடிஎம் மையங்களில் பணத்தை கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவா்களிடமிருந்து 4 கைப்பேசிகள், 4 ஏடிஎம்அட்டைகள், அலுமினியத் தகடு, இருபக்கமும் ஒட்டும் வகையிலான டேப் ஆகியவற்றையும், ரூ.10,200 ரொக்கத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கைதான சோனு, சஞ்சய்குமாா், சிவா, லவ்குஷ் ஆகிய 4 பேருக்கும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா், விழுப்புரம் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் எண் 1-இல் ஆஜா்படுத்திய போலீஸாா், வேடம்பட்டு சிறையில் நால்வரையும் அடைத்தனா். அவா்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.